பால் சுரந்து படி அளந்த பசு பயனற்று போனபின் விற்க மனமின்றி போராடும் மனிதனின் கதை இது! -இந்தியன் பனோரமா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியிருக்கும் தான் இயக்கிய ஆநிரை படம் பற்றி சொல்கிறார் இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு 

‘இந்தியன் பனோரமா 56-வது இந்திய சர்வதேச திரைப்பட விழா’ வரும் நவம்பர் 20 முதல் 28-ம் தேதி வரை கோவாவில் நடைபெறவிருக்கிறது.

அதில், இ.வி.கணேஷ்பாபு இயக்கிய ஆநிரை குறும்படம் திரையிட தேர்வாகியிருக்கிறது.

படம் பற்றி இயக்குநர் இ.வி.கணேஷ்பாபு கூறியபோது, ”உலகம் முழுவதிலிருந்தும் வரும் சிறந்த திரைப்படங்களோடு எனது குறும்படமும் பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பால் சுரந்து, படி அளந்த தன் பசுமாடு, மடிவற்றி, பயனற்று போனாலும் அதை விற்பனை செய்ய மனமின்றி போராடும் எளிய மனிதனின் கதையே இந்த ஆநிரை

இந்த யதார்த்த வாழ்வியலை உலகமே பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு இதைத் தேர்ந்தெடுத்த நடுவர்களுக்கு நன்றி” என்றார்.

இ.வி.கணேஷ்பாபு ஏற்கனவே இயக்கிய குறும்படத்திற்காக தேசிய விருது பெற்ற, ஸ்ரீகாந்த் தேவாவே இந்த படத்திற்கும் இசையமைத்திருக்கிறார். அர்ச்சுனன் மாரியப்பன், அஞ்சனா தமிழ்ச்செல்வி, மீரா, கௌரிசங்கர், காமாட்சிசுந்தரம்,
இ.வி.கணேஷ்பாபு மற்றும் பலர் நடித்த இந்த குறும்படத்திற்கு ஒளிப்பதிவு
பி. செல்லத்துரை, படத்தொகுப்பு டி. பன்னீர்செல்வம், ஆடியோகிராபி UKI ஐயப்பன் செய்துள்ளனர். ஞானி கிரியேஷன்ஸ் ஜெயந்தி படத்தை தயாரித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here