தலைப்புச் செய்திகள் முதல் சாதாரண நிகழ்வுகள் வரையிலான அனைத்து செய்திகளையும் பல்வேறு வடிவங்களில் வழங்கும் நிகழ்ச்சி ‘கிச்சன் கேபினட்.’
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு வரக்கூடிய இந்த நிகழ்ச்சி அன்றாட அரசியல் நிகழ்வுகளை அங்கதச் சுவையுடன் எடுத்துச் சொல்கிறது.
.சிவா, விஷ்ணு பிரியா என தொகுப்பாளர்கள் இருவர் நிகழ்ச்சியை நெறிப்படுத்தி வழங்க, இடையிடையே இடிதாங்கி என்ற மேடைப் பேச்சாளர் அன்றாட நிகழ்வுகளின் குரலாய் ஒலிக்கிறார்.
ஒவ்வொரு நிகழ்வுகளுக்கும் பின்னால் நடக்கும் கமுக்கமான அரசியல் நகர்வுகள் என்ன என்பதும் நிகழ்ச்சியில் இடையிடையே இடம்பெறுகிறது. சுவையான நிகழ்வுகளை ஒரு திரைப்படம் போன்று கதையாக்கி காட்சிப்படுத்தும் விதம் இந்த நிகழ்ச்சியின் மற்றொரு சுவையான அம்சம்!