பனை மரம் மீதான சமூக அக்கறையும், விபரீதங்களுக்கு வழிவகுக்கும் காதலுமாய் பரபரக்கும் ‘பனை’ ரிலீஸுக்கு தயார்!

பனைமரத்தின் அருமை பெருமைகளை மையப்படுத்தி எம்.ராஜேந்திரன் கதை திரைக்கதை வசனம் எழுதி தயாரித்துள்ள படம் ‘பனை.’

ஆதி பி.ஆறுமுகம் இயக்கியுள்ள இந்த படத்தின் நாயகன் ஹரிஷ் பிரபாகரன்; நாயகி மேக்னா. முக்கிய கதாபாத்திரங்களில் வடிவுக்கரசி,அனுபமா குமார், கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, டி.எஸ்.ஆர், லாலா கடை ரிஷா, ஜேக்கப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தயாரித்துள்ள எம்.ராஜேந்திரன், ராஜா அண்ணாச்சி எனும் கதாபாத்திரத்தில் ரகுவரன், பிரகாஷ்ராஜ் அளவுக்கு வில்லனாக நடிப்பில் மிரட்டியிருக்கிறார்.

அவரிடம் படம் பற்றி கேட்டபோது, ”பனைமரம் வளர்க்கப்பட வேண்டும், பனைத்தொழிலும் பனைத் தொழிலாளிகளும் பாதுகாக்கப்பட வேண்டும். பனைமரம் பாரத தேசமெங்கும் பரவ வேண்டும் என்ற மையக் கருத்தையும், கோயில் அர்ச்சகரின் மகள் பனைத் தொழில் புரியும் இளைஞர் மீது ஏற்படும் ஒரு தலை காதலால் நிகழும் விபரீதங்களையும் கொண்டு உருவாகியுள்ள படம் இது” என்றார்.

படத்தில் பனைமரம் பனைமரம் பணம் காய்க்கும் பனைமரம் பசி தீர்க்கும் மரமய்யா பனைமரம்… உள்ளிட்ட மூன்று பாடல்களும் முத்தாக அமைந்துள்ளது.

படம் இந்த மாதம் திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. படத்தை ‘ஆக்சன் ரியாக்சன்’ ஜெனிஷ் வெளியிடுகிறார்.

படக்குழு:-

தயாரிப்பு – ‘ஏ.எம்.ஆர் கிரியேஷன்ஸ்’ எம்.ராஜேந்திரன்

இணைத் தயாரிப்பு – ஜெ.பிரபாகரன்

பாடல்கள் – வைரமுத்து

இசை – மீரா லால்

ஒளிப்பதிவு – சிவக்குமார் ரங்கசாமி

நடனம் – தினா

மக்கள் தொடர்பு – வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here