Home சினிமா சிவனாக சமுத்திரகனி; துர்க்கையாக கஸ்தூரி; மகா விஷ்ணுவாக விக்னேஷ்… புராணத்தை மையமாக வைத்து உருவான ‘ராகு...

சிவனாக சமுத்திரகனி; துர்க்கையாக கஸ்தூரி; மகா விஷ்ணுவாக விக்னேஷ்… புராணத்தை மையமாக வைத்து உருவான ‘ராகு கேது’ ஆகஸ்ட் 8-ம் தேதி ரிலீஸ்!

தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ‘ராகு கேது.’

தமிழின் புகழ்மிகு இயக்குநர் ஏ பி நாகராஜனுக்கு பிறகு, நம் புராணத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. தமிழில் சாமி படங்களும் புராணப் படங்களும் வரவில்லை என்ற குறையைப் போக்கும் வகையில் ஆன்மிக ரசிகர்களை மகிழ்விக்கும் படைப்பாக உருவாகியுள்ளது.

இந்த படத்தை தமிழ்மாமணி துரை.பாலசுந்தரம் இயக்கியுள்ளார்.

ராகு கேது உருவான வரலாறு, அவர்கள் மனித வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவை அற்புதமான கதையாக சொல்லப்பட்டுள்ளது.

படத்தில் சமுத்திரகனி சிவனாகவும், கஸ்தூரி துர்கையாகவும், விக்னேஷ் மகா விஷ்ணுவாகவும் நடித்துள்ளனர். அவர்களோடு பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளனர்.

கலைமாமணி கே பி அறிவானந்தம் கதை, வசனம், பாடல்கள் எழுதியுள்ளார்.

மோகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பரணிதரன் பின்னணி இசையமைத்துள்ளார், கிடாரிஸ்ட் சதானந்தம் மூன்று பாட்டுகளுக்கு இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை பி .லெனின் மேற்கொண்டுள்ளனர்.

சாந்தி பாலசுந்தரம் தமிழரசன் தியேட்டர் சார்பில் தயாரிக்க, எஸ்.ஆனந்த், வி.உமாதேவி இணை தயாரிப்பு செய்துள்ளனர்.

படத்திற்கு அனைத்து வயதினரும் பார்த்து ரசிக்கும் வகையில் U சான்று வழங்கப்பட்டுள்ளது. படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வரும் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்