Home சினிமா ZEE5 தளத்தில் வெளியான வேகத்தில் ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸுக்கு 51 மில்லியன் பார்வைகள்… வெற்றியை...

ZEE5 தளத்தில் வெளியான வேகத்தில் ‘சட்டமும் நீதியும்’ வெப் சீரிஸுக்கு 51 மில்லியன் பார்வைகள்… வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய உருவாக்கக் குழு

!நடிகர் சரவணன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நீதிமன்ற வழக்கின் பின்னணியில் உருவாகி ZEE5 தளத்தில் கடந்த ஜூலை 18-ல் வெளியான வெப் சீரிஸ் ‘சட்டமும் நீதியும்.’

இந்த சீரிஸ் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றியடைந்துள்ளது. வெளியான வேகத்தில் 51 மில்லியன் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

அதையடுத்து சீரிஸின் வெற்றி விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய நடிகர் சரவணன், சட்டமும் நீதியும் இவ்வளவு உயரம் சென்றதற்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. 90 களில் நான் ஹீரோவாக வந்த போது, அத்தனை பத்திரிக்கையாளர்களும் மிகப்பெரிய ஆதரவு தந்தார்கள். இந்த சீரிஸ் வெற்றிபெற்ற பிறகும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் பிரபாகரனுக்கு அவர் மனைவிக்கும் என் நன்றி. என்னுடன் உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்போது தெலுங்கிலும் இது டாப்பாகி கொண்டிருப்பது மகிழ்ச்சி. இந்த வெற்றிக்கு காரணமான பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு மீண்டும் நன்றி” என்றார்.

இயக்குநர் பாலாஜி செல்வராஜ், பத்திரிக்கை சினிமா ஊடகங்களுக்கு நன்றி. சூரி அண்ணா தான் இந்தக் கதையை எடுத்துத் தந்து, இந்த வாய்ப்பை வாங்கித் தந்தார். தயாரிப்பாளர் பிரபாகரன், சசிகலா பிரபாகரன் இருவரும் இந்த சீரிஸிற்காக அவ்வளவு உழைத்துள்ளார்கள். சரவணன் சார் அவரை கம்படபிளாக வைத்துக்கொள்ள வேண்டும் என நினைத்தோம், ஆனால் அவர் தான் எங்களை பார்த்துக்கொண்டார் அவருக்கு நன்றி. நம்ரிதா அருமையாக நடித்துத் தந்தார். என் நண்பர் கேமராமேன் கோகுல், இசையமைப்பாளர், எடிட்டர் எல்லோருக்கும் நன்றி, இந்த படைப்பை வெற்றியாக்கித் தந்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

நடிகை நம்ரிதா, மீடியா நண்பர்களுக்கு நன்றி. இதை நல்ல அனுபவமாக மாற்றியது நீங்கள் தான். எங்களுக்கு ஆதரவு தந்த கௌஷிக் சாருக்கு நன்றி. பாலாஜி சார் இதை அருமையாக எடுத்ததற்கு நன்றி. பிரபாகர் சார் இப்போது வரை உழைத்துக் கொண்டுள்ளார். சரவணன் சார் மிகச்சிறந்த மனிதர் அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. எங்களுடன் பணியாற்றிய அனைத்து தொழில் நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. எல்லோருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் அரோல் டி சங்கர், நடிகர் குப்புசாமி, தயாரிப்பாளர் 18 கிரியேட்டர்ஸ் சசிகலா பிரபாகரன், காஸ்ட்யூம் டிசைனர் மரியா, ஆர்ட் டைரக்டர் பாவனா, எடிட்டர் ராவணன், இசையமைப்பாளர் விபின் பாஸ்கர், ஒளிப்பதிவாளர் கோகுலகிருஷ்ணன், நடிகர் சௌந்தரராஜா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்