போதைக்கு அடிமையாகும் சமுதாயம் பற்றி அலசும் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘தி பெட்லர்.’
பிரபு சதீஷ், அறிமுக நாயகி ஐஸ்வர்யா, ஸ்ரீமன், சோனியா போஸ், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
முன்னணி இயக்குநர்களிடம் டைரக்சன் துறையில் பயிற்சி பெற்ற பிரபுசதீஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாயகனாக நடித்து இயக்குகிறார்.
படம் பற்றி அவரிடம் கேட்டபோது, “இன்றைய இளைய சமுதாயம் மிக அதிகமாக போதைக்கு அடிமையாகி வாழ்க்கையைக் சீரழித்து வருகிறது. அவர்களுக்கு அந்த போதை வஸ்துகள் எங்கிருந்து வருகிறது, யார் மூலம் இளைய சமூகம் அவற்றை பெறுகிறது, இதனால் தனிப்பட்ட குடும்பம் மட்டுமல்ல சமுதாயமும் எப்படி பாழாகிறது, அவற்றிலிருந்து இளைய சமூகத்தை எப்படி மீட்டெடுப்பது என்பதையெல்லாம் மையப்படுத்தி ஆக்சன், கிரைம் திரில்லர் படைப்பாக கமர்ஷியல் படமாக உருவாக்கி வருகிறேன்” என்றார்.
சில்வர் ஸ்கிரீன் டிஜிட்டல் இந்தியா காஜா மைதீன், ஷாகுல் அமீது தயாரிக்கும் இந்த படத்தை அமீன் ஒளிப்பதிவு செய்ய, மதுசூதனன் இசையமைக்கிறார். கார்த்திக் எடிட்டிங்கையும், ராக்கி ராஜேஷ் சண்டை பயிற்சியையும், அசோக்ராஜ் நடன பயிற்சியையும், சுப்பு கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.