Home சினிமா உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல், ஆழமான நடிப்பு… கண்ணா ரவி நடிக்கும் அதிரடி தமிழ் வெப் சீரிஸ்...

உணர்ச்சிபூர்வமான கதை சொல்லல், ஆழமான நடிப்பு… கண்ணா ரவி நடிக்கும் அதிரடி தமிழ் வெப் சீரிஸ் ‘வேடுவன்’ அக்டோபர் 10-ம் தேதியிலிருந்து ZEE5 தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது! 

கண்ணா ரவி முதன்மைப் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘வேடுவன்’ சீரிஸ், வரும் அக்டோபர் 10-ம் முதல் இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-ல் ஸ்ட்ரீமாகவுள்ளது. இந்த சீரிஸ், வலுவான உணர்ச்சி பூர்வமான கதை சொல்லலையும், ஆழமான நடிப்பையும் இணைக்கும் சக்திவாய்ந்த டிராமாவாக உருவாகியுள்ளது.

மண் சார்ந்த பாரம்பரியக் கதைகளை தைரியமாக சொல்லும் முயற்சியில் தொடர்ந்து முன்னோடியாக பணியாற்றி வரும் ZEE5, வேடுவன் மூலம் அத்தகைய முயற்சியை மீண்டும் மேற்கொண்டுள்ளது. பல அடுக்குகள் கொண்ட மனித உணர்வுகள், எது சரி, எது தவறு என்பதிலான சிக்கல்கள், கடமைக்காக தரப்படும் தனிப்பட்ட விலை போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் இந்த சீரிஸ், ஒரு சாதாரண டிராமா மட்டுமல்ல, வாழ்க்கையில் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கும் ஒரு புது அனுபவமாக இருக்கும்.

சீரிஸ் பற்றி கண்ணா ரவி பேசியபோது “வேடுவன் கதை சொன்ன அந்த நொடியிலேயே இது எனக்கு மிக முக்கியமான படைப்பாக இருக்குமெனத் தோன்றியது. இது ஒரே ஒரு மனிதனின் பயணம் பற்றிய கதை மட்டுமல்ல, அவன் எடுக்கும் முடிவுகள், அதன் விளைவுகள், சரி – தவறு இடையேயான மெல்லிய கோடு ஆகியவற்றை ஆராயும் பயணமும்கூட. நடிகராக, இந்த பாத்திரம் என்னை என் கம்ஃபர்ட் ஸோனுக்கு வெளியே கொண்டு சென்று, கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ வைத்தது. வெடுவன் ஒரு சீரிஸாக மட்டுமல்ல, நீண்ட நாட்கள் மனதில் நிற்கும் ஒரு அனுபவமாக இருக்கும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்