Home சினிமா ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும்...

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது!

‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட எட்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது.

இந்த திரைப்படத்தின் வெளியீடு – மூன்று வார விழா கொண்டாட்ட அலைக்குள் அழைத்துச் செல்கிறது. முதல் வாரம் ஓணம் மற்றும் மிலாத் உன் நபி. அதைத்தொடர்ந்து இரண்டாவது வார இறுதியில் ரக்ஷா பந்தனும், மூன்றாவது வாரத்தில் ஜன்மாஷ்டமியும் என விழா காலங்கள் என்பதாலும்.. வாரத்தின் நடுப் பகுதியிலும் வலுவான உற்சாகத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அளவிலான அதிக பட்ஜெட் படத்திற்காக இந்த நீட்டிக்கப்பட்ட விடுமுறை காலம் என்பது..பாக்ஸ் ஆபீசில் எதிர்பார்ப்பை விட அதிகமான வசூலை அளிக்கும். சரியான திட்டமிடல் மற்றும் சரியான தருணங்களுக்கு பெயர் பெற்ற நானி இத்தகைய நடவடிக்கையின் மூலம் தனது சந்தை புத்திசாலித்தனத்தை மீண்டும் நிரூபிக்கிறார்.

இதற்கிடையே படத்தின் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றான நானியின் அட்டகாசமான அறிமுக பாடலை படக் குழுவினர் தற்போது படமாக்கி வருகின்றனர். நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களின் பங்களிப்புடன் ஒரு பிரம்மாண்டமான அரங்கில் இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்தர் நானியின் துடிப்பான – உற்சாகமான பாணியுடன் பொருந்தக்கூடிய ஒரு மாஸான பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்தப் பாடலை பெருங்கூட்டத்தினரை மகிழ்விக்கும் வகையில் நடன இயக்குநர் சுதன் மாஸ்டர் பெரிய அளவில் துடிப்பான நடன அசைவுகளுடன் வடிவமைத்து வருகிறார்.

‘தி பாரடைஸ்’ திரைப்படத்தில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானியுடன் மோகன் பாபு, ராகவ் ஜூயல், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். தயாரிப்பு பணிகள் நிறைவடையும் தருவாயில், பரபரப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், நானியின் கடுமையான ஜெடலுவை காண்பிக்கும் புதிய வெளியீட்டு தேதியுடன் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர் மேலும் உற்சாகத்தை அதிகரித்துள்ளது.

சி.சாய் ஒளிப்பதிவை கவனிக்கிறார். நவீன் நூலி எடிட்டராகவும், அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்