Home Uncategorized தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் இயக்குநர் 500 பேர் கேட்டா, 1500 பேர் கொடுப்பாரு; அவர்...

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் சார் இயக்குநர் 500 பேர் கேட்டா, 1500 பேர் கொடுப்பாரு; அவர் கொடுத்த சுதந்திரம்தான் இந்த படம் இவ்ளோ பிரமாண்டமா வரக் காரணம்! -மண்டாடி பட விழாவில் சூரி பேச்சு

சூரி நடித்துள்ள மண்டாடி திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நிகழ்வில் நடிகர் சூரி பேசும்போது
“எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றி. முதல்ல ராமநாதபுரம் மாவட்டம், பாசிப்பட்டினம், தொண்டி போன்ற ஊர்களில் இருந்து வந்திருக்கிற உங்க எல்லாருக்கும் மிகப்பெரிய நன்றி. நீங்க இல்லைனா இந்த ஈவென்ட் சும்மா ஒரு மீட்டிங் மாதிரி ஆகியிருக்கும்; இவ்வளவு பிரமாண்டமா, ஒரு ஆரவாரத்தோட நடக்கிறதுக்கு நீங்கதான் காரணம்.
மதி, நீங்க ரொம்ப சிறப்பா பேசுனீங்க. ஒரு முதல் பட இயக்குனர் மாதிரி இல்லாம, அவ்ளோ கெத்தா, நம்பிக்கையோட பேசுறீங்க. உங்க டீம்ல இருக்கிற அத்தனை பேரையும் மேடைக்கு கூப்பிட்டுப் பேசினது எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. உங்களுடைய முதல் படமே பெரிய பிளாக்பஸ்டரா அமைய என் மனமார்ந்த வாழ்த்துகள். கதிர் சார், உங்க கேமரா ஒர்க் கடலுக்குள்ள பிரமாதமா வந்திருக்கு. பிரதீப் ஈ ராகவ் எடிட்டிங், பாலசரவணன் நடிப்பு, தம்பி மிதுன், மகிமா எல்லாருக்கும் வாழ்த்துகள். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர், கடலுக்கு நடுவே நீங்க கோட் போட்டுட்டு நின்னுகிட்டு பண்ணிய சாகசங்கள் ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு. வெற்றிமாறன் சார் சொன்னது மாதிரி அந்த இடத்துல ரிஸ்க் எடுத்து ஒர்க் பண்ணது பெரிய விஷயம். சுஹாஸ் தம்பி, உங்க முகத்துல ஒரு அப்பாவித்தனம், அதே சமயம் மிரட்டலான வில்லத்தனம் ரெண்டும் இருக்கு. தமிழ் சினிமாவுக்கு உங்களை வரவேற்கிறேன்.
எல்ரெட் குமார் சார் மாதிரி ஒரு தைரியமான தயாரிப்பாளர் கிடைக்கிறதே பெரிய விஷயம். இயக்குனர் 500 பேர் கேட்டா, 1500 பேர் கொடுப்பாரு. அவர் கொடுத்த சுதந்திரம் தான் இந்த படம் இவ்ளோ பிரமாண்டமா வரக் காரணம். அதே மாதிரி, முக்காவாசி படம் நடுக்கடல்ல ஒரு 15-20 கிலோமீட்டர் தள்ளித்தான் எடுத்தோம். புயல், காத்துனு எவ்ளோ கஷ்டம் வந்தாலும் எங்களை பத்திரமா பாதுகாத்து கரையைச் சேர்த்த அந்த ஊர் பசங்க சுகுமார், சதீஷ், ராஜேஷ், காளிபாண்டி ஆகியோருக்கு என் ஸ்பெஷல் நன்றிகள். நீங்க இல்லைனா நாங்க கடல்ல ஷூட்டிங் பண்ணியிருக்கவே முடியாது, நீங்கதான் எங்களோட லைஃப் கார்ட்ஸ்.
இந்த படத்தோட ஷூட்டிங்ல என் கால்ல பலமா அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுருச்சு. கால் வீங்கி எழுந்து நடக்கக் கூட முடியாத நிலையில, வீல்சேர்ல உட்கார்ந்துக்கிட்டுதான் வந்தேன். டைரக்டர் கூட, ‘வேணாம் சார், உடம்பு தான் முக்கியம், அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொன்னாரு. ஆனா, ‘பரவாயில்ல தம்பி, படகில் ஏறி உக்காந்துக்கிட்டு என்னால முடிஞ்சதை பண்றேன்’னு சொல்லி நடிச்சேன். அந்த வலியிலும் எனக்காக மொத்த யூனிட்டும் உறுதுணையா நின்றார்கள்.
நான் இன்னைக்கு இந்த மேடையில நிம்மதியாக நிற்கிறேன் என்றால் அதுக்குக் காரணம் என் வீட்ல இருக்குற பெண்கள்தான். ஒரு ஆணோட வெற்றிக்குப் பின்னாடி கண்டிப்பா ஒரு பொண்ணு இருப்பாங்க. என் மனைவி, என் குழந்தைங்க எனக்குக் கொடுக்கிற சப்போர்ட்தான் என்னை எந்த கவலையும் இல்லாம ஓட வைக்குது. எல்லாரையும் விட என் அம்மா… அவங்கதான் என் சாமி. ரெண்டு நாளைக்கு முன்னாடி என்கிட்ட போன்ல பேசும்போது எங்க அம்மா ரொம்ப அழுதாங்க. ‘அன்னைக்கு ஒரு நாள் 300 ரூபா வீட்டு வாடகை கொடுக்க முடியாம, சாப்பிட வழியில்லாம போன் பண்ணி அழுதியேயப்பா… இன்னைக்கு ஊர் முழுக்க உன் பிறந்தநாள் போஸ்டர் இருக்குறத பார்த்து எனக்கு அவ்ளோ சந்தோஷமா இருக்கு’னு சொல்லி அழுதாங்க. அந்த அம்மாவோட கண்ணீரும் ஆசீர்வாதமும், உங்களோட அன்பும் தான் என்னை வாழ வைக்குது.
எனக்குத் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என் நண்பர், சகோதரர் உதய் சங்கர் அண்ணனுக்கு என் ஸ்பெஷல் தேங்க்ஸ். செப்டம்பர் 10-ஆம் தேதி ‘மண்டாடி’ படம் தியேட்டர்ல ரிலீஸ் ஆகுது. இது ஒரு மிகப்பெரிய படமா வந்திருக்கு. கண்டிப்பா உங்க எல்லாருக்கும் பிடிக்கும். தியேட்டரில் வந்து பார்த்து உங்க ஆதரவைக் கொடுங்க. ரொம்ப நன்றி, வணக்கம்!” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்