ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டு 2025 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 வியாழக்கிழமை (அக்டோபர் 16) தொடங்கப்பட்டது.
ஆசியான் 2025ன் மலேசிய தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதரகம், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தென் பகுதி அலுவலகம், இந்திய சுற்றுலா துறை, தென்னிந்தியாவில் உள்ள ஆசியான் நாடுகளின் தூதரகங்கள் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும்.
மூன்று நாட்களுக்கு நடைபெறும் இந்த விழா, பெரும் தாக்கத்தை உண்டாக்கும் சினிமாவின் கதைசொல்லல், பன்முகத்தன்மை மற்றும் பரஸ்பர அனுபவங்களைக் கொண்டாடுவதன் மூலம் ஆசியான் உறுப்பு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையே கலாச்சார ஒத்துழைப்பையும் மக்களிடையேயான தொடர்பையும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தஜிகிஸ்தான், பெலாரஸ் மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகளுக்கான முன்னாள் இந்தியத் தூதர் திரு. பி.ஆர். முத்துக்குமார் ஐ.எஃப்.எஸ்., கௌரவ விருந்தினராகக் கலந்து கொண்டார் இந்த விழாவை தொடங்கி வைத்தார்.
பிரபல திரைப்பட இயக்குநர் திரு. பி. வாசு, வெளியுறவு அமைச்சகத்தின் கிளைச் செயலகத் தலைவர் திரு. எஸ். விஜயகுமார் ஐ.எஃப்.எஸ்., இந்திய சுற்றுலா அமைச்சக பிராந்திய இயக்குநர்
திரு. வெங்கடேசன் தத்தாரேயன், சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர்
திரு. எட்கர் பாங், சென்னையில் உள்ள தாய்லாந்து துணைத் தூதர்
திரு. ரச்சா அரிபார்க்,
மியான்மர் கௌரவ தூதர் பேராசிரியர் ஜே. ரங்கநாதன், திரைப்படத் தயாரிப்பாளர் திரு. கே.டி. குஞ்சுமோன், ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் திரு. ஏவிஎம் கே. சண்முகம், சோமர்செட் கிரீன்வேஸ் சென்னை பொது மேலாளர்
திரு. மன்சூர் அகமது உள்ளிட்டோர் தொடக்க நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.
சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதர் திரு. கே. சரவண குமார் மற்றும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநரும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளருமான திரு. ஏவிஎம் கே. சண்முகம் ஆகியோர் அனைத்து பிரமுகர்களுக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கியதோடு ஆசியான்-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவதில் அவர்களின் பங்களிப்புகளைப் பாராட்டினர்.
தொடக்க உரை ஆற்றிய சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதர் திரு. கே. சரவண குமார், இந்தியாவிற்கும் ஆசியான் நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார மற்றும் சினிமா பரிமாற்றங்களைக் கொண்டாடுவதற்காக மலேசியாவின் ஆசியான் தலைமையின் கீழ் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட முதல் இந்தியா-ஆசியான் திரைப்பட விழா இது என்று குறிப்பிட்டார். இந்த மாத இறுதியில் கோலாலம்பூரில் இந்தியா-ஆசியான் உச்சி மாநாடு நடைபெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
“ஆசியான் 2025ன் தலைவராக மலேசியா இருக்கும் நிலையில், ஆசியான்-இந்தியா சுற்றுலா ஆண்டின் ஒரு பகுதியாக இந்த கலாச்சார நிகழ்வை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். படைப்பாற்றல், பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் கலாச்சார நல்லிணக்கத்தின் கொண்டாட்டமாக இந்தியா-ஆசியான் திரைப்பட விழா திகழ்கிறது. கலை, சினிமா மற்றும் சுற்றுலா மூலம் மக்களிடையேயான தொடர்புகளை ஆழப்படுத்துவதற்கான நமது அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
திரைப்படத் துறையில் விரிவடையும் வாய்ப்புகள் குறித்து பேசிய மலேசிய துணைத் தூதர் திரு. கே. சரவண குமார், திரைப்பட படப்பிடிப்பு மற்றும் திரைப்பட சுற்றுலாவிற்கு இந்தியாவுக்கு வருமாறு
ஆசியான் நாடுகளின் திரைப்பட தயாரிப்பாளர்களை கேட்டுக்கொண்டார்.
சிறப்புரை ஆற்றிய தூதர் (ஓய்வு) திரு. பி.ஆர். முத்துக்குமார், சினிமா மூலம் கலாச்சார நல்லுறவை ஊக்குவிப்பதில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். பரஸ்பர புரிதல் மற்றும் மக்களிடையேயான உறவுகளை வளர்ப்பதில் சினிமாவின் பங்கை அவர் எடுத்துக்காட்டினார்.
இந்த விழாவில் மலேசியா, இந்தியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த பல்வேறு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன.
மலேசியா: வாலிட், மென்கரி ராம்லீ
இந்தியா: 12த் ஃபெயில், பொன்னியின் செல்வன்
தாய்லாந்து: டைம் டு ஃபிளை
சிங்கப்பூர்: ஆ பாய்ஸ் டு மென்
தொடக்க நாள் அன்று மாலை 6:30 மணிக்கு மலேசிய திரைப்படமான வாலிட் திரையிடப்பட்டது. தூதரக அலுவலர்கள், அரசு அதிகாரிகள், திரையுலக பிரமுகர்கள், ஊடகவியலாளர்கள், மாணவர்கள் என 200க்கும் மேற்பட்டோரின் உற்சாகமான பங்கேற்போடு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல் அமர்வுகள் உள்ளிட்டவை நடைபெற்றன.
திரு. ஏவிஎம் கே. சண்முகம் தலைமையிலான அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, விழாவை நடத்துவதிலும் ஒருங்கிணைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தது. கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்வின் வெற்றிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினர். சினிமா மூலம் உலகளாவிய கலாச்சார பரிமாற்றம் மற்றும் கல்வி ஈடுபாட்டை வளர்ப்பதில் அவிச்சியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இது பிரதிபலிக்கிறது.
விழாவுக்கு சிறப்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆதரவை வழங்குவதற்காக சென்னையில் உள்ள மலேசிய துணைத் தூதர் திரு. கே. சரவண குமார் மற்றும் அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளரும் ஏவிஎம் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநருமான திரு. ஏவிஎம் கே. சண்முகம் ஆகியோருக்கு
இந்த நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் சிறப்புப் பாராட்டுகளைத் தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கு சோமர்செட் கிரீன்வேஸ் சென்னை சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது.
ஆசியான்-இந்தியா கூட்டாண்மையின் கீழ் பிராந்திய ஒத்துழைப்பு, கலாச்சார நல்லுறவு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் ஆசியான் உறுப்பு நாடுகள் மற்றும் இந்தியாவின் பகிரப்பட்ட அர்ப்பணிப்பை இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்தியா-ஆசியான் திரைப்பட விழா 2025 அக்டோபர் 16 முதல் 18 வரை சென்னையில் உள்ள அவிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறும்.