ராம் சரண் நடித்துள்ள ‘பெத்தி’ ஏப்ரல் 30-ல் ரிலீஸ்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், புச்சி பாபு சானா ,இயக்கத்தில் உருவாகும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பிரம்மாண்டமான பான்-இந்தியா கிராமத்து பின்னணியில் ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா திரைப்படமான “பெத்தி” படத்தின் இறுதிக்கட்ட  பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. முன்னதாக மார்ச் 27 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படம், தற்போது ஏப்ரல் 30 என்ற முக்கியமான கோடை வெளியீட்டு தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நீண்ட விடுமுறை காலத்தை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனுடன், படக்குழு தீவிரமான புரமோசன் பணிகளுக்கும் தயாராகி வருகிறது.
வெளியீட்டு தேதி போஸ்டரில், ராம் சரண் இதுவரை காணாத முற்றிலும் புதிய, மாஸ் தோற்றத்தில் தோன்றுகிறார். நீளமாக அலங்கோலமாக இருக்கும் முடி, கனமான தாடி, மூக்கில் அணிந்த வளையம் ஆகியவை அவரது உருவத்திற்கு தனிச்சிறப்பு சேர்க்கின்றன. புகை சூழ்ந்த பரபரப்பான சூழலில், சோர்வுற்றும் கடுமையான முகபாவனையுடன் நிற்கும் மக்கள் கூட்டத்திலிருந்து அவர் முன்னேறி வருகிறார். அவரது கடும் பார்வை அந்த குழப்பத்தை துளைத்துச் செல்லும் விதத்தில் அமைந்துள்ளது. முழு காட்சியும்  இருள் மிகுந்த வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டு, போராட்டம், எதிர்ப்பு மற்றும் கலக்கம் நிறைந்த உணர்வுகளை ஆழமாக வெளிப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here