Home சினிமா ரோபோ சங்கர் கதைநாயகனாய் நடிக்கும் அம்பி’ படத்தில் அப்பாவியாக இருப்பவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்நியனாக மாறுகிற...

ரோபோ சங்கர் கதைநாயகனாய் நடிக்கும் அம்பி’ படத்தில் அப்பாவியாக இருப்பவன் சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்நியனாக மாறுகிற காமெடி கலாட்டாக்கள்… மே 9லிருந்து திரையரங்குகளில் ரசிக்கலாம்!

ரோபோ சங்கர் மேடைக் கலைஞராக தனது கலைப் பயணத்தை துவங்கி, சின்னத்திரை பிறகு வெள்ளித்திரையில் காமெடியனாக கலக்கிக் கொண்டிருப்பவர். அவர் ‘அம்பி’ என்ற படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக அஸ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார்.

ரமேஷ் கண்ணா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி, மோகன் வைத்யா, கோவை பாபு, நமோ நாராயணா, மீசை ராஜேந்திரன், சேரன்ராஜ், மிப்புசாமி, ராதாமா, ஷர்மிளா, ஆர்த்தி, வித்யா, ராணி பாட்டி என ஏராளமான நட்சத்திர பட்டாளங்களும் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விண்வெளி நாயகன் டாக்டர் கமலஹாசன் வெளியிட்டிருந்தார்.

இந்த படம் வரும் 9-ம் தேதி கோடைக் கொண்டாட்டமாக நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.

இந்த நிலையில் படத்தை இயக்கியிருக்கிற பாஸர் ஜெ எல்வினிடம் பேசியபோது, ”இது முழுக்க முழுக்க பேமிலி சப்ஜெக்டில் உருவான காமெடி படம். கதையின் நாயகன் நிஜத்தில் அம்பியாக, அப்பாவியாக, பயந்தாங்கோலியாக இருக்க அவனை சுற்றி உள்ளவர்கள் ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் அவனால் தான் அனைத்தும் நடந்தது அவன் பெரிய வீரன், பெரிய அதிர்ஷ்டசாலி என்று நம்ப ஆரம்பிக்கிறார்கள்.

இப்படியான நம்பிக்கையில் மாட்டிக் கொண்ட நாயகன் எப்படி அவர்களிடம் இருந்து தப்பித்தார், இறுதியில் அம்பியாக இருந்தாரா இல்லை அந்நியனாக மாறினாரா என்பதுதான் கதை. அதை குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நகைச்சுவை படைப்பாக உருவாக்கியிருக்கிறோம்.

இந்த கதைப்படி கதையின் நாயகன் திருமணம் ஆகாத 40 வயது மதிக்கத்தக்க கதாபாத்திரம் என்பதால் அதற்கு ஒரு காமெடியன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று ரோபோ சங்கரை நடிக்க வைத்தேன். அவர் சிறப்பாக நடித்துள்ளார்.

படப்பிடிப்பு சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி போன்ற இடங்களில் நடந்தது” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்