Home சினிமா சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தை 500 திரையரங்குகளில் வெளியிடுகிறது கேப்டன் சினி கிரியேஷன்ஸ்!

சண்முக பாண்டியன் நடித்த படை தலைவன் படத்தை 500 திரையரங்குகளில் வெளியிடுகிறது கேப்டன் சினி கிரியேஷன்ஸ்!

மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு, கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘படை தலைவன்.’

காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையை சொல்லும் படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு இசை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

யாமினி சந்தர், கஸ்தூரி ராஜா, முனீஷ்காந்த், கருடாராம், அருள்தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ வெங்கடேஷ், எஸ் எஸ் ஸ்டேன்லி, லோகு என் பி கே எஸ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

புதுமையான திரைக்கதையில், முழுவதும் காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. எஸ் ஆர் சதீஷ்குமாரின் கேமரா காடும் காடு சார்ந்த இடங்களை மிகவும் தத்ரூபமாக படம் பிடித்துள்ளது.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் நிறுவனர் எல் கே சுதீஷ் கைப்பற்றிள்ளார். தமிழகமெங்கும் ஜூன் 13-ம் தேதி 500 திரையரங்குகளில் வெளியிடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்