Home சினிமா சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள ‘ஜானகி V/S ஸ்டேட் ஆஃப்...

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள ‘ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா’ சுதந்திர தினத்தன்று ZEE5 தளத்தில் திரையிடப்படுகிறது!

சுரேஷ் கோபி, அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் நீதிமன்ற பின்னணியில் உருவாகியுள்ள ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று ZEE5 தளத்தில் பிரத்தியேகமாகத் திரையிடப்படும்.

சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச் சொல்கிறது. திவ்யா பிள்ளை, ஸ்ருதி ராமச்சந்திரன், அஸ்கர் அலி, மாதவ் சுரேஷ் கோபி மற்றும் பைஜு சந்தோஷ் ஆகியோர் இணைந்து நடித்துள்ள இந்தப் படம், சட்டத்தின் குறைபாடுகள், தார்மீக தெளிவின்மை மற்றும் நிஜ வாழ்க்கையில் பெரும்பாலும் நீதியை வடிவமைக்கும் அரசியல் அடித்தளங்களை ஆராய்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் திரையிடப்படும் ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா, விவாதத்தைத் தூண்டும் மற்றும் இதயங்களைத் தொடும் ஒரு துணிச்சலான, கதையைச் சொல்கிறது.

கேரள நீதித்துறை அமைப்பின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கதை, பெங்களூருவைச் சேர்ந்த ஐடி நிபுணரான ஜானகி வித்யாதரன் (அனுபமா பரமேஸ்வரன்) பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பிறகு, தனது சொந்த ஊருக்குப் பண்டிகைக் கால பயணம் செல்வது ஒரு இருள் மிகு கனவாக மாறுவதைப் பின்தொடர்கிறது. நீதியைத் தேடத் தீர்மானித்த அவள், கூர்மையான மற்றும் சாந்தமான வழக்கறிஞரான டேவிட் ஆபெல் டோனோவன் (சுரேஷ் கோபி) குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாட முன்வரும்போது, ஒரு சிக்கலான சட்டப் போராட்டத்தில் சிக்கிக் கொள்கிறாள். சட்ட வாதங்களுக்கும் பாதிக்கப்பட்ட உயிருள்ள ஜீவன்களுக்கும் இடையில் சிக்கிக்கொண்ட ஜானகியின் போராட்டம், இந்திய நீதித்துறை அமைப்பின் ஆழமான தார்மீக மற்றும் நெறிமுறை சங்கடங்களை அம்பலப்படுத்துகிறது. சட்டம் பாதுகாக்கப்பட வேண்டிய உலகில், சரிக்கும் தவறுக்கும் இடையிலான கோடுகள் மங்கலாகி, ஒரு கேள்வியை விட்டுச்செல்கின்றன. ஜானகிக்கு உண்மையில் என்ன நடந்தது, நீதி என்றால் உண்மையில் என்ன? என்பது தான் இந்தப்படத்தின் மையம்.

படத்தை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்