Home சினிமா கருணை இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஷண்முகம்!

கருணை இல்லத்தில் பிறந்த நாளை கொண்டாடிய நடிகர் ஷண்முகம்!

இன்றைய உலகில் பிறந்த நாள் என்றாலே குடி,கும்மாளம்,ஆட்டம் பாட்டம் என்று இருக்கும் இவ்வேளையில் நடிகர் ஷண்முகம் தன் பிறந்த நாளை அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்தி உள்ளார் என்றே சொல்லலாம்.

ஷண்முகம் தமிழ் டிவி தொடர்களிலும், திரைப்படத்துறையிலும் பிரபலமான நடிகர்.

அவர் தனது நடிப்பு பயணத்தை சன் டிவியில் ஆதிரா, வாணி ராணி ஆகிய தொடர்களில் ராதிகா சரத்குமார் உடன் 50 எபிசோடுகள் மேலாக நடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து விஜய் டிவி தொடர்களான பொன்மகள் வந்தாள், மௌன ராகம் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

தொலைக்காட்சியில் மட்டுமல்லாமல், பல நாடகத்தில் நடித்துள்ளார். பல விருதுகள் பெற்றுள்ளார். Orange Vision விளம்பரத்திலும், லைசென்ஸ் திரைப்படத்திலும் நடித்துள்ளார். ஜீ தமிழ் வழங்கிய மோனோ ஆக்டிங் 1-ம் பரிசு மற்றும் மியூஸிக் அகாடமி வழங்கிய Media Focusing Award ஆகியவை இவருக்குக் கிடைத்துள்ள முக்கிய விருதுகள்.

நடப்பில், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் பவித்ரா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 200ஆம் எபிசோட் கடந்து சாதனை புரிந்து வருகிறது.படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஒரு கருணை இல்லத்தில் தனது பிறந்த நாளை அர்த்தமுள்ள முறையில் கொண்டாடினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்