Home சினிமா பெரிய நட்சத்திரங்களின் பங்களிப்பின்றி கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்படும் மலையாளப் படங்களில் ஒன்றாக உருவான ‘பெண்கோடு’...

பெரிய நட்சத்திரங்களின் பங்களிப்பின்றி கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்படும் மலையாளப் படங்களில் ஒன்றாக உருவான ‘பெண்கோடு’ ரிலீஸுக்கு தயாராகிறது!

மலையாளத்தில் இப்போது புதிய போக்கில் மிகவும் யதார்த்தமான திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அவை பெரிய நட்சத்திரங்களின் ஆதரவு இல்லாமல் கதையின் அடர்த்தியை நம்பி உருவாக்கப்பட்டு வசூலில் சாதனை படைத்து வருகின்றன. அந்த வரிசையில் உருவாகியுள்ள படம் ‘பெண்கோடு.’ அருண் ராஜ் பூத்தணல் எழுதி இயக்கியுள்ளார்.

ஆணும் பெண்ணும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானவை; இரண்டும் தனித்தனியானவை. என்கிறார் தத்துவ மேதை ஜே. கிருஷ்ணமூர்த்தி. ஆண் இரண்டு கண்களால் பார்ப்பதைப் பெண் ஓர் இதயத்தால் பார்க்கிறாள். ஆண் அழகை குணமாகப் பார்க்கிறான். பெண்ணோ குணத்தை அழகாகப் பார்க்கிறாள். இப்படி ஆண், பெண் இடையே பார்வையில் எண்ணங்களில் வேறுபாடு உண்டு. இப்படி பெண்களுக்கு என்று பிரத்தியேகமான சில எண்ணங்கள் உள்ளன. அவர்களுக்கு என்று குறியீடுகள், சங்கேதங்கள், சமிக்ஞைகள் உள்ளன. அவற்றை அவர்களின் உலகத்தில் உள்ளே நுழைந்து பார்த்தால்தான் அறிந்து கொள்ள முடியும். அவற்றின் அடிப்படையில் உருவாகியுள்ள படம் இது.

இப்படம் தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் பரபரப்பான க்ரைம் திரில்லர் படமாக உருவாகியுள்ளது.

ஜீத்து ஜோசப்பின் லைஃப் ஆஃப் ஜோசக்குட்டி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அருண் சாக்கோவும், இமை , மதர், வின்சென்ட் செல்வா இயக்கிய கம்மாட்டிக்களி திரைப்படத்தில் அறிமுகமான சரீஷ் தேவும் இப்படத்தில் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். லட்சுமி சாந்தா மற்றும் சோனா ஆகியோர் கதாநாயகிகளாக அறிமுகமாகின்றனர்.

ஓச்சாயி பட தயாரிப்பாளரும் நடிகருமான திரவிய பாண்டியன் அவர்கள்,கார்த்திகா ஸ்ரீராஜ், உன்னி காவியா, எபின் வின்சென்ட், ஷம்ஹூன், ஜார்ஜ் தெங்கனாந்தரத்தில், ஜோஸ் நடத்தி பறம்பில், பேபி அதிதி , சந்தீப் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

வயநாடு, ஊட்டி, திருவனந்தபுரம் ஆகிய கேரளாவின் பசுமை சூழ்ந்த பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிந்து மெருகேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதையடுத்து படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் ஜித்தன் ரமேஷ் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

படம் நவம்பர் முதல் வாரத்தில் JNKL ரிலீஸ் மூலம் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்