தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் ஏன்யா கட்சி நடத்துறீங்க? -இயக்குநர் பேரரசு ஆவேசம்

பயங்கரவாதிகளால்
டெல்லியில் குண்டு வெடிப்பு!

இங்கு பல அரசியல் தலைவர்கள்
உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கிறார்களே தவிர,
பயங்கரவாதிகளுக்கு கண்டனம்
தெரிவிக்கவில்லை!

தீவிரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிக்க தைரியம் இல்லாதவர்கள் எல்லாம் ஏன்யா கட்சி நடத்துறீங்க?

சில ஊடகங்கள் அந்த தீவிரவாதியை தீவிரவாதி, பயங்கரவாதி என்று குறிப்பிடவில்லை. ஏன் அந்த தீவிரவாதியின் பெயரைக் கூட குறிப்பிடவில்லை! ‘கார் ஓட்டி வந்தவர்’ என்று ஏதோ கார் விபத்து போன்று சொல்கின்றனர்.

இந்தியாவிற்குள்ளே இந்தியாவிற்கு எதிரான எண்ணம் உள்ளவர்கள் இருக்கும்வரை, தீவிரவாதிகளுக்கு ஆதரவு மனப்பான்மை உள்ளவர்கள் இருக்கும்வரை இந்தியாவிற்கு ஆபத்து இருந்து கொண்டுதான் இருக்கும்!

முதலில் இங்கிருக்கும்
இந்தியக் களைகளை,
பாகிஸ்தான் கிளைகளை
களைந்தெடுக்க வேண்டும்!

-இயக்குநர் பேரரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here