நிழல் என தலைப்பு வைத்ததற்கு பதிலாக ‘சிங்கப் பெண்’ என வைத்திருக்கலாம். அந்தளவுக்கு கதையின் நாயகி அதிரடி சம்பவங்களைச் செய்கிற படம்.
அழகிலும் சிரிப்பிலும் அமுல் பேபி போலிருக்கிற இளம்பெண் ரம்யா ஒருசில இளைஞர்களைக் கடத்தி, கொடூரமாகத் தாக்குகிறார். தாக்கப்பட்டவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை என்ற நிலைமைக்கு ஆளாகிறார்கள். அப்போதே அவர்களால் அவளோ, அவளைச் சார்ந்தவர்களோ பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதற்காக பழி வாங்குகிறாள் என்றும் தோன்றுகிறது. தோன்றுவது சரிதான் என்கிறது கதையின் போக்கு.
என்ன பாதிப்பு, யாருக்கு பாதிப்பு என்பதில் பரபரப்பு மசாலாவைத் தூக்கலாக தட்டியிருக்கிறார் இயக்குநர ஏ கே குமார்.
