பாடலாசிரியர் டாக்டர் கிருதயா அவர்கள் இயற்கை எய்திய செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இயக்குநர் விவேக பாரதி அவர்கள் இயக்கிய ‘பாசக்காரப் பய’ என்ற படத்தில் அவர் பாடல் எழுதும் சூழ்நிலையை ஏற்படுத்தித் தந்தேன்.

சாயம் போட்ட உதட்டு மேல சாயப் பாக்குற…
சரிசமத்த இதுல மட்டும் கெஞ்சி கேட்குற…
ஒரு பெண் பாடுவதைப் போல் வரும் இந்த வரிகளை என் மெட்டுக்கு எழுதி, “சார் இது கொஞ்சம் வெரசமா இருக்கும், பரவாயில்லையா…?” என்றார். காதலுக்கு சமத்துவம் இல்லாத நம்ம இந்தியாவுல இதுதான் சரியான வரிகள்…
தத்துவப் பாடல்களில் தான் சமத்துவத்தை சொல்லலாம் என்றில்லாமல்,விரசப் பாட்டிலும் சமத்துவ பாகுபாட்டை சொல்லியிருக்கீங்க,அந்த வகையில் நீங்க நல்ல கவிஞர் தான் என்றேன்…பூரித்துப் போனார்…
“ஜிஞ்சனக்கன ஜனச்சனக்கன
கிழிஞ்சது வேட்டி…
பஞ்சு மெத்தையில் உனக்கும் எனக்கும் சடுகுடு போட்டி”…
அந்தோணி தாசன்,வனிதா பாடிய இந்தப் பாடலுக்கு நடிகர் விக்னேஷ் குத்தாட்டம் போட்டிருப்பார்.
இவர் எழுதிய இந்தப் பாடலை அடிக்கடி கேட்கும் நான், தொடர்ச்சியாய் தொடர்பில் வந்து பேசும் இவரின் பேச்சை இனி எப்போது கேட்பேன்…
ஆழ்ந்த இரங்கல்!
இசையமைப்பாளர் செளந்தர்யன்



