சென்னை தி. நகர் பாண்டிபஜாரில் வரமஹாலக்ஷ்மி சில்க்ஸ் ஷோரூமை பிரபல நடிகையும் நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் திறந்து வைத்தார்.
சாய் சில்க்ஸ் (கலாமந்திர்) அதன் 52-வது கிளையாக இந்த ஷோரூமை உருவாக்கியுள்ளது. இது தமிழ்நாட்டின் நான்காவது ஷோரூமாக அமைந்துள்ளது. சென்னையில் ஏற்கனவே மயிலாப்பூர், காந்தி சாலை, அண்ணா நகரில் வர மஹாலக்ஷ்மி ஷோரூம்கள் அமைந்துள்ளன.
‘காஞ்சிபுரம் வர மஹாலக்ஷ்மி சில்க்ஸ்’ என்ற பெயரில் இயங்கும் இந்த புதிய SSKL ஷோரூம், 12000 சதுர அடிக்கு மேல் பரப்பளவைக் கொண்ட வளாகத்தில் மூன்று தளங்கள் முழுவதும் பரவி விரிந்துள்ளது.
பனாரஸ், பட்டோலா, கோட்டா, காஞ்சிபுரம், பைத்தானி, ஆர்கன்சா மற்றும் குப்படம் போன்ற பல்வேறு வகையான புடவைகள் உள்ளிட்ட உயர்தர தயாரிப்புகள் இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளது.
ஷோரூமை திறந்து வைத்த ஜான்வி கபூர் “சாய் சில்க்ஸின் நான்காவது காஞ்சிபுரம் வர மஹாலக்ஷ்மி ஸ்டோரை சென்னையில் தொடங்குவது மிகவும் உற்சாகமாக இருக்கிறது. சாய் சில்க்ஸின் நிபுணத்துவம் மற்றும் அதிநவீன வடிவமைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதும், பாணியாக வெளியே சென்று வாழ்க்கையின் பொன்னான தருணங்களை அனுபவிக்க உத்வேகத்தை அளிக்கிறது.
தரம், வாடிக்கையாளர் சேவை, தயாரிப்பு வகை ஆகியவற்றில் நிறுவனத்தின் செயல்பாட்டு மையம், தனித்துவமானது மேலும் அதன் பிராண்ட் அங்கீகாரத்தை வாடிக்கையாளர் விசுவாசத்தை பலப்படுத்துகிறது மற்றும் மேம்படுத்துகிறது ” என்றார்.
2011-ல் பெங்களூருவில் உள்ள சிக்பெட்டில் முதல் ஸ்டோரை நிறுவியதன் மூலம், வர மஹாலக்ஷ்மி ரீடெய்ல் பிராண்ட் மாடல் நிறுவப்பட்டது. மே 31, 2022 நிலவரப்படி, இது பெங்களூரு, ஹைதராபாத், சென்னை, விஜயவாடா, நெல்லூர் மற்றும் பிற நகரங்களை உள்ளடக்கியதாக விரிவடைந்துள்ளது.

