பிரபல பேச்சாளரும், அரசியல்வாதியும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் ஐ லியோனியின் மகன் லியோ செல்வகுமார் கதாநாயகனாக நடிக்கும் முதல் படம் ‘அழகிய கண்ணே.’
இயக்குநர் சீனு ராமசாமியின் உதவி இயக்குநரும், தம்பியுமான விஜயகுமார் இயக்குநராக அறிமுகமாகும் இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார்.
வரும் ஜூன் 23-ம் தேதி திரைக்கு வரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. படக்குழுவினருடன் திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் திண்டுக்கல் லியோனி பேசும்போது, ‘‘கே எஸ் ரவிக்குமார் சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவர் வந்து என் மகனை வாழ்த்துவது மகிழ்ச்சி. இந்த படக்குழுவில் அனைவருமே மிக எளிமையானவர்கள். சிறிய கதாபாத்திரம் என்றாலும் நான் கேட்டதும் உடனே ஒப்புக் கொண்டு நடித்த விஜய் சேதுபதிக்கு மிகப்பெரிய நன்றி. என் மகன் என்பதற்காகச் சொல்லவில்லை கொஞ்சம் சிரமப்பட்டுதான் இந்த படத்தில் நடித்தான். அவன் உழைப்பிற்கு இந்த படம் கண்டிப்பாக வெற்றி பெறும். படத்தில் பணி புரிந்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
இயக்குநர் விஜயகுமார் பேசும்போது, ‘‘நான் சீனு ராமசாமியின் உதவியாளர், அவரின் உடன் பிறந்த தம்பி. அவருடன் நான்கு படங்களில் வேலை பார்த்துள்ளேன். அந்த அனுபவத்தில் ஒரு நல்ல படைப்பை உருவாக்க வேண்டுமென்கிற நோக்கத்தில், இந்த படத்தை உருவாக்கியுள்ளேன். மாமனிதன் படத்தில் சிவா சிவகுமார் ஒரு கதாப்பாத்திரம் செய்தார். அப்போது அண்ணன் இவன் ஒரு ஹீரோ மெட்டீரியல், என்றார். அதை மனதில் வைத்து அவரை ஹிரோவாக்கினேன்.
இந்தப் படம் உருவாக முக்கிய காரணம் லியோனி அண்ணன். அவர்தான் தயாரிப்பாளரிடம் என்னை அனுப்பினார். சிவா கடுமையாக உழைத்துள்ளார். தமிழ் சினிமாவில் சிறந்த இடத்தை பிடிப்பார். இப்படம் மதுரையில் ஆரம்பித்து சென்னை நோக்கி நகரும் கதை. உதவி இயக்குநரின் வாழ்வைச் சொல்லும் கதை. பல நாயகிகள் இந்தக் கதையைக் கேட்டு தயங்கினார்கள் ஆனால் சஞ்சிதா ஷெட்டி கேட்டவுடன் நடிக்கிறேன் என்றார். அவருக்கு இந்த படம் திருப்பமாக இருக்கும்.
இயக்குநர் பிரபு சாலமன் இயக்குநராகவே நடித்துள்ளார். அவர் தனது அலுவலகத்தையும் படப்பிடிப்பிற்கு தந்தார். நட்புக்காக முதல் முறையாக விஜய் சேதுபதி, விஜய் சேதுபதியாகவே நடித்துள்ளார். இது சமூக நீதி பேசும் அழகான படம். ஆதரவு தாருங்கள்” என்றார்.
கதாநாயகன் லியோ சிவக்குமார் பேசும்போது, ‘‘சினிமாவில் நடிப்பது மிகப்பெரிய கனவு. அதை புரிந்து எனக்கு சுதந்திரம் அளித்த என் தந்தைக்கு இந்த படத்தை சமர்ப்பிக்கிறேன். சினிமாவை நம்பி பல ஆண்டுகள் நான் பயணம் செய்துள்ளேன், சினிமாவை சுற்றித்தான் என் வாழ்க்கைப் பயணம் இருந்தது.
இந்த படத்திற்கு கதாநாயகி தேர்வுதான் மிகவும் கடினமாக இருந்தது. சஞ்சிதா ஷெட்டி இந்தப் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். எனக்கு நடிப்பில் நிறையை உதவிகள் செய்துள்ளார். இந்த படம் எனக்கு முதல் படி, அனைவரும் இந்த படத்திற்கு ஆதரவு தர வேண்டும்” என்றார்.
நடிகை சஞ்சிதா ஷெட்டி பேசும்போது, ‘‘இந்த படத்தில் எனக்கு மிக முக்கியமான பாத்திரம். ஐடியில் வேலை பார்க்கும் சென்னை பெண். என் திரை வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம். சிம்பிள் லவ் ஸ்டோரி. ஒரு உதவி இயக்குநரின் வாழ்வை இந்தப் படம் மூலம் அறிந்துகொள்வீர்கள். உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.
நிகழ்வில் நடிகர் அமுதவாணன், விஜே ஆண்ட்ரூஸ் நடிகை பானு, ஒளிப்பதிவாளர் அசோக்குமார், தயாரிப்பு நிறுவனம் சார்பில் ராஜகோபால் ஆகியோரும் பேசினர்.
படக்குழு:-
தயாரிப்பு – Esthell Entertainer
வழங்குபவர் – Kannan Ravi Group
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழின்
Esthell Entertainer சார்பில் சிறந்த படைப்புகளை உருவாக்க வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டு வருகிறோம். லியோனி சார் கொரோனா காலகட்டத்தில் இந்தக் கதையைக் கொண்டு வந்தார். கதை பிடித்துப்போனதால் கொரோனா என்றாலும் பரவாயில்லை என தயாரிப்பில் இறங்கி விட்டோம். லியோ சிவக்குமார் மிக அருமையான கதாபாத்திரம் செய்துள்ளார். படம் நல்ல படைப்பாக வந்துள்ளது. அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.
நிகழ்வில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் படக்குழுவை வாழ்த்திப் பேசினார்.
படக்குழு:-
தயாரிப்பு – Esthell Entertainer
வழங்குபவர் – Kannan Ravi Group
இயக்கம் – R.விஜயகுமார்
இசை – ரகு நந்தன்
ஒளிப்பதிவு – அசோக் குமார்
படத்தொகுப்பு – சங்கத்தமிழின்