காதl, அரசியல், ஆன்மிகம் என கலந்துகட்டிய கதை திரைக்கதையில் ‘முருகா’ அசோக்குமார் கதையின் நாயகனாக நடிக்கும் படம் ‘அலப்பறை.’
சி.எஸ் காளிதாசன் இயக்கியிருக்கியிருக்கும் இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல இயக்குநரும் நடிகருமான ‘யார்’ கண்ணனின் மகள் சாயாதேவி நடித்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது ‘உலக அரசியலை கற்றுத் தேர்ந்த இளைஞன் ஒருவன் தன் காதலியுடன் சந்தோஷமாக இருக்கிறான். ஆனால் எதிர்பாராத விதமாக தன் நண்பன் மூலம் அரசியலில் நுழைகிறான். விதியோ அவனை ஒரு ஆன்மிகத் தலைவனாக மாற்றி விடுகிறது. முடிவில் அவன் காதலின் நிலை என்ன? அரசியலின் பார்வை என்ன? ஆன்மீகவாதியாக தொடர்ந்தானா? என்பதே கதைக்களம்’ என்றார்.
ப்டத்தில் பி.எல் தேனப்பன், ‘யார’ கண்ணன், நமோ நாராயணன், அன்வர் அலிகான், கோதண்டம், வலைப் பேச்சு ஜெ.பிஸ்மி, தம்பி சிவன், ஹரிநாத், ரதியா ஹரி, ஆலந்தூர் பிரவீன்குமார், வேல்குமார் ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றியுள்ளனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள ‘தேவலோக சுந்தரி மயக்கும் ராஜதந்திரி…, டும்மாங்கோலி சரக்கடிச்சா ஜாலி…எனும் துள்ளலிசை பாடல் ரசிகர்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும். இரண்டு சண்டைக் காட்சிகளும் படத்தில் உண்டு. படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

