ராகவா லாரன்ஸ் – வடிவேலு நடிக்கும் ‘சந்திரமுகி 2.’ மைசூரில் தொடங்கியது படப்பிடிப்பு!

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் பெரும் பொருட்செலவில் ‘சந்திரமுகி 2’ படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார்.

ராகவா லாரன்ஸ் கதையின் நாயகனாக நடிக்க, ‘வைகைப் புயல்’ வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘சந்திரமுகி’ படத்தை இயக்கிய பி.வாசுவே இயக்குகிறார்.

ஹாரர் திரில்லர் ஜானரில் தயாராகும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நேற்று மைசூரில் பூஜையுடன் தொடங்கியதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரிப்பில், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜி. கே. எம். தமிழ் குமரன் அவர்களின் மேற்பார்வையில் உருவாகவிருக்கும் ‘சந்திரமுகி 2’ படத்தின் தயாரிப்பு ஒருங்கிணைப்பு பணிகளை பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணி கவனிக்கிறார்.

‘பாகுபலி’, ‘ஆர் ஆர் ஆர்’ பட புகழ் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார். தோட்டா பானு கலை இயக்குநர் பொறுப்பை ஏற்க, ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘பொன்னியின் செல்வன் முதல் பாகம்’ படத்தின் டீசர் வெளியாகி ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது என்பதும், இதனை தொடர்ந்து  ‘சந்திரமுகி’ படத்தின் இரண்டாம் பாகத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

படப்பிடிப்பு துவங்குவதையொட்டி, ராகவா லாரன்ஸ், சூப்பர் ஸ்டாரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் என்பது கூடுதல் தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here