பழம்பெரும் நடிகை ராஜசுலோச்சனாவின் 88வது பிறந்தநாளை முன்னிட்டு திநகரில் உள்ள ஆந்திரா கிளப்பில், NGL அறக்கட்டளை சார்பாக அமுதும் தேனும் என்கிற நிகழ்ச்சி தேவி கிருஷ்ணா தலைமையில் நடைபெற்றது. பழம்பெரும் பன்முகத் திறன்கொண்ட நடிகைகளின் திரைப்படம் மற்றும் பாடல்கள் திரையிடப்பட்டது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக 1960, 1970 காலகட்டத்தில் திரைத் துறையில் புகழின் உச்சத்திலிருந்த ஸ்ரீமதி லதா, லட்சுமி பாய், ஏ.எல்.எஸ். ஜெயந்தி, சுஜ்ஜரித்தா உள்ளிட்ட நடிகைகள் கலந்து கொண்டன. மேலும் சில பிரபலங்கள் , சமூக ஆர்வலர்களும் பங்கேற்றனர்..
இந்த 75-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள அபிஷேக், ஜெயஸ்ரீ ஆகிய இரண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.