ஷாருக்கான், தீபிகா படுகோனே நடனம்; அனிருத் இசை நேரலை… ‘ஜவான்’ சக்ஸஸ் மீட்டில் உற்சாக கொண்டாட்டம்!

ஜவான் படத்திற்கு உலகம் முழுவதும் கிடைத்துவரும் வரவேற்பு மற்றும் ரசிகர்களின் கொண்டாட்டத்தையடுத்து, படக்குழுவினர் வெற்றியை கொண்டாடும் விதமாக செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் அபாரமான வசூல் எண்ணிக்கையுடன், இன்னும் வெற்றிநடை போட்டு இன்னும் பல புதிய சாதனைகளை படைத்து வருகிறது. வெற்றிக்கு நன்றி சொல்லும் வகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் படத்தின் முக்கிய நட்சத்திரக் குழுவினர் கலந்துகொண்டு, ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

பத்திரிகையாளர் சந்திப்பில் ஜவான் படத்தின் பாடல் நிகழ்ச்சியை படக்குழு நிகழ்த்தியது. இந்நிகழ்ச்சி மும்பையில் 2 மணி நேரம் மாலையில் நடைபெற்றது. படத்தின் ஒலிப்பதிவு மற்றும் பின்னணி இசையமைத்த அனிருத் ரவிச்சந்தர், சந்திப்பின் போது நேரலையில் இசையமைத்தார். கிங்கானின் ராப் டிராக்கை எழுதி பாடிய ராஜ குமாரியும் இதில் பங்குகொண்டார். ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனேவுடன், விஜய் சேதுபதி, சுனில் குரோவர், சன்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பெண் கலைஞர்களும் மற்றும் ஜவானின் முழு நட்சத்திரக் குழுவினரும் கலந்து கொண்டனர். இயக்குநர் அட்லியும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இவர்களைத் தவிர, ஜவானுக்குப் பின்னால் முதுகெலும்பாக இருந்த ஜவானின் தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் சாலேயா பாடலுக்கு ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோனே நடனமாடி அசத்தினர். இதற்கு முன்னதாக, ஷாருக்கான் நாட் ராமையா வஸ்தாவய்யா பாடலை நேரலையில் நிகழ்த்தி அனைவரையும் உற்சாகப்படுத்தினார்.

நாயகி நயன்தாரா சில காரணங்களால் பங்கேற்க முடியாததால், ஊடகங்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here