Home பொது பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியை இயக்குகிறார் மோகன் ராஜா!

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தியை இயக்குகிறார் மோகன் ராஜா!

‘சிங்கம் 2’ மற்றும் ‘சர்தார்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கிய ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம், நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் மோகன் ராஜா ஆகியோரை இணைத்து பிரம்மாண்டமான குடும்பத் திரைப்படத்தை உருவாக்குதை பெருமையுடன் அறிவித்துள்ளது.
குடும்பம், உணர்வுகள் மற்றும் வீரத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்டமான திரைப்படப் பயணம் தொடங்குகிறது.
குடும்ப விழுமியங்கள், மனதிற்கு நெருக்கமான பொழுதுபோக்கு மற்றும் ஊக்கமளிக்கும் வீரம் ஆகியவற்றை திரையில் கொண்டுவரும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த புதிய படத்தின் மூலம், நடிகர் கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். இந்த கூட்டணி மூலம் ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம் மீண்டும் ஒரு தரமான படைப்பை தயாரிக்க முன்வந்துள்ளது.
அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், அனைவராலும் விரும்பப்படும் கார்த்தியின் பரிமாணத்தை இந்தப் படம் மீண்டும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’ மற்றும் ‘தனி ஒருவன்’ போன்ற படங்களுக்காக புகழ்பெற்ற இயக்குநர் மோகன் ராஜா, இந்த அறிவிப்பின் மூலம் திரையுலகில் தனது 25-ஆவது ஆண்டை கொண்டாடுகிறார். ரசிகர்கள் மற்றும் திரையுலகினரிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இவரது இந்த அறிவிப்பு, அவரது பயணத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. மேலும், கார்த்தியுடன் அவர் இணையும் செய்தி வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
இப்படத்தைப் பற்றிய செய்தியை அறிவிக்கும்போது, ‘பிரின்ஸ் பிக்சர்ஸ்’ நிறுவனம், “ஒரு புதிய பயணம் தொடங்குகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
எஸ். லக்ஷ்மன் குமார் தயாரிக்கும் இப்படத்தில் நட்சத்திர பட்டாளமும், வலுவான தொழில்நுட்ப குழுவும் இடம்பெறவுள்ளன; இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. நடிகர்கள், தொழில்நுட்பக் குழு மற்றும் வெளியீடு குறித்த கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்