வரலக்ஷ்மி சரத்குமார் முதன்மை பாத்திரத்தில் நடித்து சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வரவேற்பு பெற்ற படம் ‘கொன்றால் பாவம்.’ இந்த படத்தை இயக்கிய தயாள் பத்மநாபன் அடுத்ததாக ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார். கொன்றால் பாவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த வரலக்ஷ்மி சரத்குமாரே இந்த படத்திலும் முதன்மை பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.நான் – லீனியர் பாணியில் புதிய பரிமாணத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வரலக்ஷ்மி சரத்குமார், ஆரவ் இருவரும் போலீஸ் அதிகாரிகளாக நடித்துள்ளனர். சந்தோஷ் பிரதாப், மஹத் ராகவேந்திரா, சுப்ரமணியம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
படம் பற்றி இயக்குநரிடம் பேசியபோது “இந்த படம் பல சாதக பாதகங்களைக் கொண்ட காவல் நிலையத்தின் பின்னணியில் நடக்கும் சம்பவங்களைக் கதையாகக் கொண்டது. உண்மையான ஸ்டேஷன் பெயர்கள் மற்றும் பகுதிகளை நாங்கள் இதில் படமாக்க விரும்பவில்லை. அடிப்படையில், நான் ஹனுமானின் தீவிரமான பக்தர். அதனால், ‘மாருதி நகர் போலீஸ் ஸ்டேஷன்’ என்று கற்பனையான பெயரை வைத்தோம். படப்பிடிப்பு முடிந்து பட வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் நடக்கிறது” என்றார்.
‘கொன்றால் பாவம்’ வெற்றிக் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படக் குழு:-
இசை: மணிகாந்த் கத்ரி
ஒளிப்பதிவு: சேகர் சந்திரா
படத்தொகுப்பு: ப்ரீத்தி மோகன்
தயாரிப்பு வடிவமைப்பாளர்: சிஎஸ் பாலச்சந்தர்
ஆடை வடிவமைப்பு: மீரா சித்திரப்பாவை
ஸ்டண்ட் கோரியோகிராஃபி: சேத்தன் டி சோசா
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் வினோத் குமார்