இளம் கன்னியாஸ்திரியின் உணர்வுகளின் பின்னணியில் உருவாகி, சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுக்களைக் குவித்த ‘மரியா’ விரைவில் ரிலீஸ்! 

கன்னியாஸ்திரியாக வாழும் ஒரு இளம்பெண்ணின் உணர்வுகளின் பின்னணியில் அறிமுக இயக்குநர் ஹரி கே சுதன் தயாரித்து, எழுதி, இயக்கியுள்ள படம் ‘மரியா.’

புதுமுகம் சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பில் அன்பினைப் பேசும் அழகான டிராமாவாக உருவாகியுள்ள இந்த படம் உலகின் பல முக்கியமான சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு விருதுகளை வென்றுள்ளது. இத்தாலி, மலேசியா, லண்டன், நேபாளம், புது தில்லி, ஹரியானா, மும்பை, கேரளா, உத்தரபிரதேசம், கொல்கத்தா ஆகிய நாடுகளில் திரையிடப்பட்டுள்ளது. மேலும், சிறந்த இந்திய திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகை, சிறந்த இசை என பல விருதுகளையும் பெற்றுள்ளது. விரைவில் திரைக்கு வரவுள்ளது.

இந்த பூமியில் சூழலில் ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு பாதையை வாழ்க்கையாக தேர்ந்தெடுக்கிறார்கள். அன்பின் பாதை எல்லோருக்கும் உரிமையானது. மரியா ஒரு கன்னியாஸ்திரி பெண் , அவள் ஒரு சாதாரண பெண்ணைப் போல வாழ விரும்புகிறாள், ஆனால் சமூகமும் அவளைச் சுற்றியுள்ள மக்களும் அதை கடினமாக்குகிறார்கள். அவளின் அன்பு ஜெயிக்கிறதா? அவள் கனவு நனவானதா ? என்பதே இப்படத்தின் கதைகளம்.

ஒவ்வொரு தவறுக்குப் பின்னும் ஒரு நியாயம் உண்டு, அந்த நியாயத்தை அழுத்தமாக பேசும் ஒரு அழகான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

இப்படம் சென்னை அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் மற்றும் சிதம்பரம் பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்த்தில் அறிமுக நடிகை சாய்ஸ்ரீ பிரபாகரன் முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். பாவல் நவகீதன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி சுதா புஷ்பா, ஆகியோரும் நடித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here