சூரி நடிக்கும் மண்டாடி திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்று போஸ்ட் புரொடக்சன் பணிகள் துவங்கியுள்ளது.

ராமநாதபுரம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில், கடினமான சூழ்நிலைகளில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் ஆழத்தையும், அதன் இயல்பான ஆற்றலையும் உண்மைத்தன்மையுடன் வெளிப்படுத்தும் வகையில், படக்குழு மிகுந்த உழைப்புடன் பணியாற்றியுள்ளது. பெருமளவிலான ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சி மிகுந்த தருணங்கள் மற்றும் படகு பந்தய காட்சிகள் ஆகியவை மிகத் துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள மண்டாடி, தனித்துவமான விளையாட்டு பின்னணியில் அமைந்த, வலுவான கதை சொல்லலுடன் உருவாகியுள்ளது.
உள்ளடக்கமிக்க திரைப்படங்களில் தனது பயணத்தை மாற்றி அமைத்து வரும் சூரி இந்தப் படத்திற்காக உடல் மற்றும் மனதளவில் கடுமையான உழைப்பை மேற்கொண்டுள்ளார். அவரது நடிப்பு இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



