Home பொது நூறுசாமி சினிமா விமர்சனம்

நூறுசாமி சினிமா விமர்சனம்

‘பெண்களை தெய்வமாக மதிப்பதெல்லாம் இருக்கட்டும்; முதலில் அவளை மனுஷியாக மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்’ என வலியுறுத்தும் சப்ஜெக்ட். தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் நடந்த நல்ல சம்பவம் ஒன்றை மையப்படுத்தி ‘நூறுசாமி.’

தன் மகன்கள் இருவரும் கல்லூரிப் படிப்பை முடித்து வேலைக்குப் போகத் தயாராகிவிட்ட காலகட்டத்தில், அந்த பெண்மணிக்கு மறுமணம் செய்துகொள்ளும் விருப்பம் தொற்றுகிறது. மகன் எதிர்க்க, அந்த விருப்பத்தை மனதில் புதைத்துக் கொள்கிறார். ஒருசில வருடங்கள் கடந்தோட அதே மகன் அம்மாவின் விருப்பத்துக்கு பச்சைக்கொடி காட்ட, இப்போது அம்மா மறுக்கிறார். மகன் பேசிப்பேசி சம்மதிக்க வைக்கிறான். மாப்பிள்ளையும் கிடைத்துவிடுகிறார். விடிந்தால் கல்யாணம்.

‘முடிந்தால் நடத்திப் பாருங்கள்’ என்கிற அளவுக்கு அந்த கல்யாணத்துக்கு சொந்த பந்தம் துவங்கி, ஊர் மக்கள், காவல்துறை என எல்லா பக்கமிருந்தும் வெறித்தனமான எதிர்ப்பு.

அதற்கு காரணம் என்ன? மறுமணம் நடந்ததா இல்லையா?

இந்த கேள்விகளுக்கு பதில்களாய் விரியும் இயக்குநர் சசியின் திரைக்கதை மனதை உலுக்குகிறது…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்