Home Uncategorized மனதைத் தொடும் கதையில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி திரைப்படத்தை ஆகஸ்ட்...

மனதைத் தொடும் கதையில் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள நூறு சாமி திரைப்படத்தை ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் பார்த்து ரசிக்கலாம்!

இயக்குநர் சசி எழுதி இயக்கிய உணர்வுபூர்வ குடும்ப நாடகமான நூறு சாமி, ஆகஸ்ட் 7 முதல் தமிழ் ZEE5-ல் திரையிடப்படுகிறது. பிச்சைக்காரன் திரைப்படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்திற்குப் பிறகு, புகழ்பெற்ற இயக்குநர் சசி மற்றும் விஜய் ஆண்டனி மீண்டும் இணைந்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் ஆண்டனி மற்றும் பாத்திமா விஜய் ஆண்டனி ஆகியோர், விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த திரைப்படம், தற்போது தமிழ் ZEE5-ல் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் ஆகிறது.
நூறு சாமி திரைப்படத்தில் விஜய் ஆண்டனி, ஸ்வாசிகா, அஜய் திஷன், லிஜோமோல் ஜோஸ், கருணாஸ், காவ்யா அனில், பாலாஜி சக்திவேல் மற்றும் அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்த திரைப்படம், உணர்வுபூர்வமான கதையாடல், சக்திவாய்ந்த நடிப்புகள் மற்றும் சமகால சமூகக் கருத்துக்களை நுணுக்கமாக கையாள்ந்த விதத்திற்காக பாராட்டுகளைப் பெற்றது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான இந்த திரைப்படம், தனது குடும்பத்தை வளர்ப்பதற்காக வாழ்நாளை அர்ப்பணித்த விதவைத் தாயான செல்வியைப் பற்றியது. வாழ்க்கையின் பின்னர் கட்டத்தில் அவர் துணையைத் தேட முடிவு செய்யும்போது, ஆழமாக வேரூன்றிய சமூக நெறிமுறைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சுற்றியுள்ளவர்களின் எதிர்ப்புகளைச் சந்திக்கும் செல்வியின் வாழ்க்கையின் மூலம், நூறு சாமி தாய்மை, கண்ணியம், ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகளை மீறி மகிழ்ச்சியைத் தழுவிக் கொள்ளும் துணிச்சலைப் பேசும் மனதை நெகிழ வைக்கும் கதையாக விரிகிறது.
இந்தக் கதையின் மையமாக, வழக்கமான பார்வைகளை தலைகீழாக மாற்றும் ஒரு புத்துணர்ச்சியான தாய்-மகன் உறவு அமைந்துள்ளது. ஒரு தாயின் தியாகங்களை மட்டும் கொண்டாடுவதற்குப் பதிலாக, தனது தாயின் மகிழ்ச்சிக்காக அவளுக்கு துணையாக நின்று, அவள் விரும்பும் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கும் மகனின் பாசத்தை நூறு சாமி வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. மனதைத் தொடும் உணர்வுகளையும், அர்த்தமுள்ள சமூகக் கருத்துக்களையும் இணைத்து, தலைமுறைகளைத் தாண்டி அனைவருடனும் ஒத்திசைவாக இணையும் ஒரு கதையை இந்த திரைப்படம் வழங்குகிறது. அதே நேரத்தில் கருணை, குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளின் முக்கியத்துவத்தையும் கொண்டாடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்