சிறுபான்மையினர் அச்சத்துடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள்தான்! -முதலமைச்சர் மு க ஸ்டாலின் மீது பாயும் இயக்குநர் பேரரசு

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு!

ஒரு முதலமைச்சராக இருந்து கொண்டு நீங்கள் இப்படி கூறுவது தவறு.

இது ஒட்டுமொத்த இந்துக்களையும் இழிவுபடுத்தும் வகையில் உள்ளது!
திருப்பரங்குன்றம் தீப விஷயத்தில் எந்த ஒரு இஸ்லாமியரும் எதிர் கருத்து கூறவில்லை.

அதை எதிர்த்ததும், அதை எதிர்த்து வழக்கு தொடுத்ததும் நீங்கள் தான். அதைச் சர்ச்சைக்கு உள்ளாக்கியதும் உங்கள் அரசுதான்.

நீங்கள் சொல்வது போல் சிறுபான்மையினர் அச்சத்துடன் இருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் நீங்கள் தான்.

உங்கள் தந்தையார் காலத்திலிருந்து ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினருக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கிறோம் என்று உறுதி கூறித்தானே அவர்களிடம் ஓட்டு வாங்கி பலமுறை ஆட்சிக்கு வந்தீர்கள்.

இன்னும் அவர்கள் அச்சத்துடனே இருக்கிறார்கள் என்றால் அதற்கு யார் பொறுப்பு?
இத்தனை முறை நீங்கள் ஆண்டும் என்ன செய்தீர்கள்?

இதுவரைக்கும் உறுதுணையாக இல்லையா?

அப்போ அவர்களிடம் நீங்கள் கொடுத்த வாக்குறுதி பொய்யா?

முதல்வர் அவர்களே!

சிறுபான்மையினர் தைரியமாகத்தான் இருக்கிறார்கள் ஓட்டுக்காக நீங்கள்தான் அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறீர்கள்.

நீங்கள் சொல்லும் மதச் சார்பின்மை என்பது பொய்!

இந்து மதச்சார்பின்மை என்பதுதான் மெய்!

இந்துக்களை எவ்வளவு இழிவுபடுத்தினாலும் ஓட்டு போடும் இந்துக்கள் நமக்கு போட்டுக் கொண்டே இருப்பார்கள் என்று தைரியத்தை ஒரு நாள் ஒட்டுமொத்த இந்துக்களும் உடைத்து விடுவார்கள்!

பிரித்தாள்வது சூழ்ச்சி!

ஒற்றுமைக்காக ஆள்வதுதான் ஆட்சி!

-இயக்குனர் பேரரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here