உற்சாகமாய் நடந்தேறிய பாட்ரிஷியன் கல்லூரியின் 21-ம் ஆண்டுவிழா கொண்டாட்டம்… பல புதிய வசதிகள் துவக்கம்!

சென்னை அடையாறில் அமைந்துள்ள பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 21-ம் ஆண்டு விழா ஆகஸ்ட் 12 -ம் தேதி கொண்டாடப்பட்டது.

விழா கணக்காளர் திரு. மார்ட்டின் பீட்டர் அவர்களின் பிராத்தனையுடன் தொடங்கியது. தொடர்ந்து கல்லூரியின் இயக்குநரும், செயலாளருமான அருட்சகோதரர் முனைவர் அ. ஸ்தனிஸ்லாஸ் அவர்கள் சிறப்பு விருந்தினருக்குப் பொன்னாடை போர்த்திக் கௌரவித்தார்.

கல்லூரியின் முன்னாள் மாணவரும், தற்போதைய வணிக நிர்வாகவியல் துறை உதவிப் பேராசியருமான திரு. டேனியல் பெலிக்ஸ் சாக் அவர்களால் பாட்ரிஷியன் கல்லூரி இதழ் வெளியிடப்பட்டது. பின் அவர் இக்கல்லூரியில் படித்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து பேசிய, உள்கட்டமைப்பு நிபுணர் (infrastructure specialist) திரு. ந. முத்துக்குமரன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை (Memorandum Of Understanding) அறிமுகம் செய்து வைத்தார்.

அவருக்குப் பின் ACL டிஜிட்டல் நிறுவனத்தில் கற்றல் மற்றும் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் HRBP பொறுப்பில் பணிபுரியும் செல்வி. அனிதா நான்சி அவர்கள் 2022 – 2023-ம் கல்வியாண்டிற்கான நேர்மறை, விடாமுயற்சி, முன்னேற்றம் என்னும் கருப்பொருளை (theme) வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் ஆசை, அர்ப்பணிப்பு, வளர்ச்சி என்பதைக் கடைப்பிடித்து வாழ்வில் வெற்றி பெற மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். அதன்பின் YUBI நிறுவனத்தில் மனித வள இயக்குநராகச் (HR Director) செயலாற்றும் திரு. ரமேஷ்குமார், பாட்ரிஷியன் தரவு மையம், கணினி அறிவியல் கருத்தரங்கு மையம், பாட்ரிஷியன் உடல், மனம், ஆன்மா இணக்க அரங்கம், உன்னத் பாரத் அபியான், பாட்ரிஷியன் பழச்சாறகம், தொடர்பு பலகை (Interactive Boards) எனப் பல புதிய வசதிகளைத் தொடங்கி வைத்தார். அதன்பின் அவர் தனது பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையும், அவர் சந்தித்த இடர்பாடுகளையும் பகிர்ந்து கொண்டார்.

தொடர்ந்து பாட்ரிஷியன் கல்வி இயக்குநர் முனைவர். பாத்திமா வசந்த், பாட்ரிஷியன் விருதுகளையும் அங்கீகாரத்தையும் வெளியிட்டார். அதன்பின், கல்லூரி முதல்வர் முனைவர் உஷா ஜார்ஜ் அவர்கள் நன்றியுரை நல்கினார்.

மாணவர்கள் கல்லூரி கீதம் பாட, ஆண்டு விழா இனிதே நிறைவுற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here