காட்டுக்குள் நடக்கும் பரபர பயணத்தின் சிறு துளியை அறிமுகப்படுத்தும் வகையில் மிரள வைக்கும் உருவாக்கத்தில் வெளியான டீசர் ரசிகர்கள், விமர்சகர்கள், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
படம் பற்றி இயக்குநர் தனபாலன் கோவிந்தராஜ் பேசும்போது, ”கேங்ஸ்டர் கூட்டம், அரசியல்வாதிகள், போலீஸ் என மூவரால் தேடப்படும் ஒருவனுக்கும் இளைஞன் ஒருவனுக்கு காட்டில் ஏற்படும் நட்பும், அதனை தொடர்ந்து நடக்கும் சம்பவங்களுமே கதை. அந்த காட்டுக்குள் அவர்கள் சிக்கியது ஏன், எதிரிகளிடமிருந்து தப்பித்தார்களா என்பதை ஒரு நாளுக்குள் நடக்கும் நிகழ்வுகளாக சொல்லியுள்ளோம். இந்தியாவில் நடந்த உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இந்த கதையை உருவாக்கியுள்ளோம். ஊட்டி முதுமலை காடுகளில் படமாக்கியுள்ளோம். மாறுபட்ட ஒரு பரபரப்பான திரில் பயணமாக இப்படம் இருக்கும்” என்றார்.
ஒளிப்பதிவு – அஷ்வின் நோயல், எடிட்டர்கள் – (டான் படப்புகழ்) நாகூரான் ராமசந்திரன் – நெல்சன் அந்தோணி, இசை – ரெஞ்சித் உண்ணி, சண்டை காட்சிகள் – ஓம் பிரகாஷ், கலை இயக்கம் – விவேக் செல்வராஜ், உடை வடிவமைப்பு – கார்த்திக் குமார்.S, சண்முகப்பிரியா, மக்கள் தொடர்பு – சதீஷ் AIM ஆகியோர் பணியாற்றுகின்றனர்.
படத்தின் டிரெய்லர், இசை மற்றும் திரையரங்கு வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.




