தர்ஷன் முதன்முறையாக போலீஸாக நடிக்கும் ‘சரண்டர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பட வெளியீட்டுக்கான பணிகள் துவக்கம்!

தர்ஷன் முதன்முறையாக போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘சரண்டர்.’ கிரைம் ஆக்ஷன் திரில்லராகவும் உணர்வுப் பூர்வமாகவும் உருவாகும் இந்த படம் அருமையான திரையரங்க அனுபவம் கொடுக்கும் என படக்குழு நம்பிக்கை கொடுக்கிறது.

பிரபல இயக்குநர் அறிவழகனிடம் துணை இயக்குநராக பணியாற்றிய அனுபவத்துடன், இந்த படத்தின் திரைக்கதை எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் கௌதமன் கணபதி.

லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான், பதினே குமார் உள்ளிட்ட திறமையான நடிகர்கள் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

தர்ஷனின் தீவிரமான நடிப்பு கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்திருக்கிறது’ என்கிறார் இயக்குநர்.

விக்டர் குமார் தயாரிக்கும் இந்த படத்துக்கு பிரபல இசையமைப்பாளர் விகாஸ் பதீசா (தமிழில் முதல் முறையாக) இசையமைக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் உட்பட பலருடன் பணியாற்றிய இவர், தனித்துவமான இசையமைப்புகளுக்காக பாராட்டப்பட்டவர்.

படப்பிடிப்பு நிறைவடைந்து, பட வெளியீட்டுக்கு பிந்தைய பணிகள் நடக்கிறது. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

படக்குழு:
🎥 ஒளிப்பதிவு – மெய்யேந்திரன்
🎨 கலை இயக்கம் – ஆர்.கே. மனோஜ்குமார்
✂ எடிட்டிங் – ரேணுகோபால்
🔥 ஸ்டண்ட் இயக்கம் – ஆக்ஷன் சந்தோஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here