பாக்யஸ்ரீ போஸ் தென்னிந்திய திரையுலகில் மிஸ்டர் பச்சன் மற்றும் கிங்டம் படங்கள் மூலம் அறிமுகமாகி, நடிப்பால் ரசிகர்களை கவர்ந்துதுள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக உருவெடுத்துள்ளார்.
அதையடுத்து சமீபத்தில் துபாயில் நடைபெற்ற SIIMA விருதுகளில் சிறந்த அறிமுக நடிகை விருதை கைப்பற்றி, வெள்ளித்திரையில் தன் வருகையை அழுத்தமாக பதித்துள்ளார்.
தற்போது அவர் துல்கர் சல்மானுடன் இணைந்து நடிக்கும் காந்தா, ராம் பொத்தினேனி ஜோடியாக நடிக்கும் ‘ஆந்திரா கிங் தாலுகா’ உள்ளிட்ட பல்வேறு படங்கள் அவரது நடிப்பில் விரைவில் வெளியாக காத்திருக்கின்றன.
ஔரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பாக்யஸ்ரீ SIIMAவில் சிறந்த அறிமுக நடிகை விருது வென்றிருப்பது ஒரு தொடக்கமே. வரும் நாட்களில் இன்னும் பல விருதுகளைப் பெறுகிற அளவுக்கு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் தனித்துவமான நடிப்பை வழங்க வேண்டும் என்ற ஈடுபாட்டுடன் உழைத்து வருகிறார்.

