‘லில்லி ராணி’ சினிமா விமர்சனம்
அந்த ஒன்றரை வயதுக் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் சீரியஸான பிரச்சனைக்கு ஆபரேஷன் மட்டுமே தீர்வு. ஆபரேஷனுக்கு பல லட்சங்கள் செலவாகும். தவிர, அந்த ஆபரேஷனுக்கு கட்டாயமாக குழந்தையின் தந்தையிடமிருந்து உடல் ரீதியிலான ஒத்துழைப்பும் தேவை.
குழந்தையின் தாய் பாலியல் தொழிலாளி. குழந்தை யார் மூலமாக பிறந்தது என குழம்பித் தவிக்கும் அந்த தாய், குழந்தையைக் காப்பாற்ற எடுக்கும் முயற்சிகளும் அதன் விளைவுகளுமே கதையோட்டம்…
நிச்சயமாய் படு வித்தியாசமான கதை. பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையை மையப்படுத்திய கதைக்களம் என்றாலும் ஆபாசமான காட்சிகள் இல்லாமலிருப்பது தனித்துவம்!
கதையின் நாயகியாக சாயாசிங். குழந்தையின் உயிர் காக்கப் போராடும் தாயின் தவிப்பை உணர்த்தும் முகபாவங்கள் கச்சிதம்.