பாஞ்சாலியின் துகிலை உரித்தவன் மட்டும் துச்சாதனன் இல்லை. மற்றவர்களுக்கு ஏற்படும் அவமானம், இழப்பு போன்ற எதையும் சிந்திக்காமல் தன் சுயநலத்துக்காக மற்றவர்களின் உடைமை, உரிமை, உயிர் போன்றவற்றை உரியும் அனைவரும் துச்சாதனன் தான்.
இப்படியொரு கோணத்தில் விறுவிறுப்பான கதைக்களம் அமைத்து ‘துச்சாதனன்‘ என்ற படத்தை இயக்குகிறார் தளபதி. இந்த படத்தின் நாயகனாக விகாஸ் நடிக்கிறார். இவர் ‘அகிலா’, ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’, ‘ஒற்றாடல்’ போன்ற உள்ளிட்டபடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் சாய் ரோகிணி நடிக்கிறார்.
‘லொள்ளு சபா’ மனோகர், மில்டன் மேடிசன், பிரபு சாஸ்திரி, வேளாங்கண்ணி, அருண் விக்னேஷ், விக்னேஷ் வி.எஸ்., சரவணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கவிருக்கிறார்கள்.
படப்பிடிப்பு சத்யமங்கலம் பகுதியில் நடக்கிறது. படத்தில் மூன்று பாடல்களும் இரண்டு சண்டைக் காட்சிகளும் இடம் பெறுகின்றன.
‘தாய் திரையரங்கம்’ சார்பில், எஸ்.அருண் விக்னேஷ், ஆர்.வேல்முருகன் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறார்கள்.இந்த படத்தின் துவக்கவிழா சென்னையில் இன்று (12.2. 2023 / ஞாயிறு) நடந்தது. அப்போது இயக்குநரிடம் படம் பற்றி கேட்டபோது, ”படத்தின் ஆரம்ப காட்சியில் ஒரு நகைக்கடையில் திருட்டு நடக்கிறது. அந்த திருட்டை யார் செய்தார்கள் என்பதை கண்டுபிடிக்க காவல்துறை களமிறங்குகிறது. அதன் பின்னர் நடக்கும் சுவாரஸ்யமான திருப்பங்களே படத்தின் கதை” என்றார்.
தொழில்நுட்பக் கலைஞர்கள்:- ஒளிப்பதிவு பி.வி.பால முருகன், இசை விஜய் பிரபு, எடிட்டிங் வி.எஸ்.விக்னேஷ், சண்டைப் பயிற்சி ராக்கி ராஜேஷ், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்