சமூகம் சார்ந்த கனமான கருத்தை முன்வைத்து உருவான ‘வேம்பு’ திரைப்படம், தற்போது அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விருதுக்கான பிரிவில் போட்டியிட்டது.
அதில் சிறந்த நடிகைக்கான விருது ஷீலாவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட்டது.
இந்த செய்தியைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் வி ஜஸ்டின் பிரபு,
“சிறந்த கதை அம்சம்கொண்ட யதார்த்தமான திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி விருதுகளை அள்ளுவதுடன், திரையரங்குகளிலும் பெருவாரியான வெற்றியைப் பெற்று வருகின்றன.
அதன்படி, அகமதாபாத்தில் திரையிடப்பட்ட வேம்பு எங்களுக்கு இரு இனிப்பு விருதுகளைத் தந்துள்ளது.
நாயகன் ஹரிக்கும், நாயகி ஷீலாவுக்கும் விருதுகள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
இந்த விருதுகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. மக்களும் திரையரங்கில் வேம்பு படத்தைப் பார்த்து வெற்றியாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு முன்னதாக இந்த படத்தின் முன்னோட்டம் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளது” என்றார்.
