விகாஷ், சிங்கம்புலி, தமிழ்ச் செல்வி, மணிமாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘துச்சாதனன்.’
தளபதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. 
படத்தில் இடம்பெறும் இரண்டு சண்டைக் காட்சிகளை ராக்கி ராஜேஷ் சிறப்பாக அமைத்துக் கொடுத்துள்ளார்.
ஹீரோ விகாஷ் மற்றும் இயக்குநர் தளபதி இருவரும் கடும் உழைப்பில் இந்த படத்தை விறுவிறுப்பாக உருவாக்கி உள்ளனர்.
விவா பிலிம்ஸ், வி.ஜி.ஸ்டுடியோஸ் மற்றும் தாய் திரையரங்கம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தைப் பற்றி இயக்குநர் கூறும்போது, ”பெற்றோர்கள் குழந்தைகளுக்கு கேட்பதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள், படிக்க வைக்கிறார்கள், சொத்து சேர்த்து வைக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் மொழிப்பாடம், அறிவியல், கணிதம், கணிப்பொறி என எல்லாமும் கற்றுத் தருகிறார்கள். ஆனால் பெற்றோரும் சரி, ஆசிரியர்களும் சரி குழந்தைகளுக்கு ஒழுக்கமாக வாழ்வது எப்படி என்பதை கற்றுத் தர தவறி விடுகின்றனர். இன்று சமூகத்தில் நடக்கும் அத்தனை அவலங்களுக்கும் காரணம் ஒழுக்கக் கேடுதான். அப்படி ஒழுக்கக் கேட்டால் நடந்த விபரீதம் என்ன, அதற்கு காவல்துறை எடுத்த நெஞ்சைப் பதறவைக்கும் நடவடிக்கை என்ன என்பதே படத்தின் கதை’ என்றார்.
படத்துக்கு இசை விஜய் பிரபு, ஒளிப்பதிவு பாலமுருகன், நடனம் பவர் சிவா, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்

