Home Uncategorized கத்தாரில் நடந்த ‘என்றென்றும் கேப்டன்’ விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சி… இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, முன்னாள் அமைச்சர்...

கத்தாரில் நடந்த ‘என்றென்றும் கேப்டன்’ விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சி… இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, முன்னாள் அமைச்சர் ரோஜா செல்வமணி பங்கேற்பு!

தோஹா, கத்தாரில் நடைபெற்ற ‘என்றென்றும் கேப்டன்’ விஜயகாந்த் நினைவு நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநர் ஆர்.கே. செல்வமணி, முன்னாள் அமைச்சர் ரோஜா செல்வமணி பங்கேற்பு!

தோஹா, கத்தார்: மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் தனது 10ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, மறைந்த நடிகரும் தலைவருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்களை நினைவுகூரும் வகையில் “என்றென்றும் கேப்டன் (Forever Captain) – என்ற தலைப்பில் பிரம்மாண்டமான கலாச்சார நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை, 19 டிசம்பர் 2025 அன்று மாலை 6.30 மணிக்கு, DPS–MIS அரங்கம், Doha, Qatar இல் சிறப்பாக நடத்தினர்.

இந்த நிகழ்ச்சிக்கு 1,000-க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் திரளாக கலந்துகொண்டு, தோஹாவில் வாழும் இந்திய சமூகத்தினரிடையே கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்குள்ள ஆழ்ந்த மரியாதையும் உணர்வுப்பிணைப்பையும் வெளிப்படுத்தினர். அரங்கம் முழுவதும் மக்களின் பெரும் வரவேற்பும், பாராட்டும் நிகழ்ச்சி முழுவதும் வெளிப்படையாகக் காணப்பட்டது.

நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக, பிரபல திரைப்பட இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் திருமதி ரோஜா செல்வமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு நிகழ்ச்சியை மேலும் சிறப்பித்தனர். அவர்களின் பங்கேற்பு, விஜயகாந்த் அவர்களுக்கு செலுத்தப்பட்ட நினைவு அஞ்சலிக்கு கூடுதல் பெருமையும் கவன ஈர்ப்பையும் சேர்த்தது.

மேலும், இந்திய தூதரகத்தின் Counsellor (Head of Chancery and Consular) பொறுப்பில் உள்ள டாக்டர் ஸ்ரீ வைபவ் ஏ. தாண்டலே அவர்கள் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் கத்தாரில் உள்ள இந்திய சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இரவு முழுவதும் நடைபெற்ற பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மூலம் திரைப்படம், தலைமைத் தன்மை, சமூகச் சேவை, பொது வாழ்க்கை ஆகிய பல தளங்களில் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்