Home Uncategorized கருப்பு சினிமா விமர்சனம்

கருப்பு சினிமா விமர்சனம்

கோர்ட்டில் நீதிபதி முன் வாதாடும்போது வழக்கறிஞர்களுக்கு பொய் பேச முடியாமல் போய்விட்டால் என்னவாகும்?

நினைத்தாலே சுவாரஸ்யமாக இருக்கிறதுதானே?

சென்னையிலுள்ள ஒரு குறிப்பிட்ட கோர்ட்டில் அப்படியான சுவாரஸ்ய சம்பவங்கள் கருப்பு சாமியின் அருளால் நடக்கிறது.

கோர்ட்டுக்கும் கருப்பு சாமிக்கும் என்ன சம்பந்தம்? வழக்கறிஞர்கள் பொய் பேசாதவர்களாக மாறுவது எப்படி? அந்த மாற்றம் யாருக்கு சாதகம், யாருக்கு பாதகம்?

இந்த கேள்விகளுக்கு பதில்களாய் விரியும் காட்சிகளில் மனம்போன போக்கில் பரபரப்பு கூட்டியிருக்கிறார் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி

40 நிமிடங்கள் படம் ஓடியபிறகே என்ட்ரீ கொடுக்கிறார் சூர்யா. வக்கீல் ஒருவர் தன்னிடம் வரும் வழக்குகளில் ஜெயிப்பதற்காக விதவிதமான மோசடிகளில் ஈடுபட, அவரால் அப்பாவிகள் பாதிக்கப்பட, நடக்கும் தவறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க கருப்புசாமியான அவர் வழக்கறிஞர் அவதாரமெடுத்து வரும்போது அடடே என்றிருக்கிறது. கோர்ட்டில் கடவுளுக்கான சக்தியைக் காட்டியும் காட்டாமலும் என இருவேறு விதமாக களமாடும்போது ஹீரோயிஸத்தில் தெறிக்கவிடுபவர், கருப்புசாமியாக போடும் ஆட்டத்தில் வெளிப்படுத்தும் உக்கிரம் கூஸ்பம்ஸ் மொமன்ட்.

வழக்கறிஞராக வருகிற ஆர் ஜே பாலாஜிக்கு நீதிபதியை கைக்குள் போட்டுக் கொள்வதிலிருந்து வழக்குகளில் வெற்றி பெறுவதற்காக என்னவெல்லாம் அநியாய அக்கிரமம் செய்ய முடியுமோ அதையெல்லாம்  செய்கிற, தான் நினைத்ததை சாதித்துக் காட்ட வன்முறைகளிலும் ஈடுபடுகிற வேலை. ஆரம்பக் காட்சிகளில் கொஞ்சம் கொஞ்சம் ரசிக்க வைத்து, போகப்போக வில்லத்தனத்தில் வீரியம் காட்ட முயற்சித்திருக்கிறார்.

த்ரிஷாவுக்கு ஹீரோவை வளைத்து வளைத்து காதலிக்கிற, டூயட்’டுக்கு ஆடுகிற வழக்கமான கதாநாயகிகள் போல் வலம்வர அவசியமில்லை; கருப்புசாமியின் அவதார நோக்கம் நிறைவேற ஒத்துழைப்பு தருகிற கடமையிருக்கிறது. இதைவிட ஒல்லியாக முடியாது என்கிற அளவுக்கு மெலிந்து, முகம் ஒடுங்கிப் போயிருக்கிற

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்