Home சினிமா அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுக்கு வந்த அறுவடை திரைப்படத்தின் படப்பிடிப்பு! 

அறுவடைத் திருநாள் கொண்டாட்டத்துடன் நிறைவுக்கு வந்த அறுவடை திரைப்படத்தின் படப்பிடிப்பு! 

எம். கார்த்திகேசன் இயக்கி கதைநாயகனாக நடிக்கும் அறுவடை திரைப்படத்தின் படப்பிடிப்பு அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் பொங்கல் திருநாளில் கோயம்புத்தூரில் பொங்கல் விழா கொண்டாடி நிறைவுக்கு வந்துள்ளது.

படத்தில் கதாநாயகியாக சிம்ரன் ராஜ், முக்கிய கதாபாத்திரத்தில் பருத்திவீரன் சரவணன், மற்ற வேடங்களில் ராஜசிம்மன், கஜராஜ், அனுபராமி கவிதா, தீபா பாஸ்கர் நடிக்கிறார்கள்.

கிராமப்புற மக்களின் வாழ்வியல் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டை பிரதிபலிக்கும் வகையில் உருவாகும் இந்த படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ”ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடைபெறும் ஒரு சிறிய பிரச்சினை, மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து சமூகத்தை எப்படி சீரழிக்கிறது என்பதை விவரிக்கும் வகையில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. ‘வினை விதைத்தவன் வினை அறுப்பான்’ என்ற ஒரு தத்துவத்தை மையப்படுத்தி இப்படத்திற்கு ‘அறுவடை’ என பெயரிட்டிருக்கிறோம். விரைவில் படத்தை வெளியிட உள்ளோம்” என்றார்.

ஆனந்த், ஒளிப்பதிவு -ரகு ஸ்ரவண் குமார், இசை , படத்தொகுப்பு – கே .கே . விக்னேஷ். பாடல்கள் – கார்த்திக் நேத்தா, கார்த்திகேசன், கானா சக்தி. கிராமியப் பின்னணியிலான கமர்சியல் படமாக உருவாகும் இந்தத் திரைப்படத்தை எம் கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் இயக்குநர் எம். கார்த்திகேசன் தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்