கோவாவிற்கு எதிராக, சொந்த ஊரான சென்னையில் தனது 2-வது போட்டியை விளையாட உள்ளது சென்னையின் எஃப்.சி.
இப்போட்டி வரும் வெள்ளியன்று நடைபெற உள்ளது. வீரர்களை, முதல் இரண்டு போட்டிகளில் காட்டிய அதே உத்வேகம் மற்றும் தீவிரத்துடன் விளையாடுமாறு வலியுறுத்தினார் தலைமைப் பயிற்சியாளரான தாமஸ் ப்ராட்ரிக்.
சீசனை ஏ.டி.கே மோகுன் பகானை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய சென்னை அணி, ஜவஹர்லால் நேரு அரங்கத்தில் நடந்த பெங்களூரு உடனான இரண்டாவது போட்டியில் டிராவில் முடித்தது.
“பெங்களூரு உடனான போட்டி எவ்வாறு வேண்டுமானால் முடிந்திருக்கலாம். ஆனால் நாங்கள் ஒரு புள்ளி எடுத்தோம். இரண்டு போட்டிகளில் விளையாடி 4 புள்ளிகள் என்பது மோசமானது அல்ல. எங்கள் இலக்கை இதே உத்வேகம் மற்றும் தீவிரத்துடன் விளையாடுவதுதான் முக்கியம்” என்று கூறினார் சென்னையில் வியாழனன்று செய்தியாளர்களைச் சந்தித்த (47 வயது) தாமஸ் ப்ராட்ரிக்.
முதல் இரண்டு போட்டிகளில், ப்ராட்ரிக்கின் வீரர்கள் ஈர்க்கத்தக்க ஆட்டத்தை வெளிக்காட்டியதை நாம் கண்டோம்.

“நாங்கள் அணியை வலுப்படுத்தும் செயல்முறையில் ஈடுபட்டுள்ளோம். இது தொடக்கத்தில் இருந்து இறுதி வரை உள்ள ஒரு நீளமான பாதை என்று நான் வீரர்களிடம் சொல்லியுள்ளேன். நமது அனுபவத்திலிருந்து நமது வலிமை, ஆற்றல் மற்றும் உத்வேகத்தை மேம்படுத்த வேண்டும். நாம் நமது எதிரணிக்கு கோல் அடிக்கும் வாய்ப்பை குறைவாகத் தரவேண்டும். விசில் அடித்த நொடியிலிருந்து நமது நூறு சதவீதத்தைத் போட்டிக்குக் கொடுக்கவேண்டும்” என்றார்.
செய்தியாளர் சந்திப்பின்போது ப்ராட்ரிக்குடன் டிஃபண்டர் நாராயண் தாஸும் இருந்தார். களத்தில், ஆட்ட போக்கிற்கு வீரர்களின் எதிர்விணையின் முக்கியத்துவத்தைப் பற்றி,“களத்தில் எதிர் அணியைப் போட்டியிட்டு விளையாடும்போது, நிலைமைக்கு ஏற்ப வீரர்கள் முடிவுகள் எடுப்பது மிகவும் அவசியம்” என்றார்.
பெங்களூரு உடனான கடந்த போட்டியில் ரெட் கார்ட் வாங்கியதால், கோல்கீப்பர் டெப்ஜீத் மஜும்தர் இப்போட்டியில் விளையாடமாட்டார். அவருக்கு பதிலாக களம்காணும் தேவான்ஷ் தபாஸ் நல்ல ஆட்டம் வெளிப்படுத்துவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் ப்ராட்ரிக்.
“டெப்ஜீத்துக்குப் பதிலாக தேவான்ஷ் விளையாடுவார். அவர் நன்றாக விளையாடுவார் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. நாளை அவரை நிரூபிக்கும் வாய்ப்பாக அமையும்” என்றார் ப்ராட்ரிக்.
2020-ம் ஆண்டு, மரினா அரேனாவில் இறுதியாக கோவாவை சென்னையின் எஃப்.சி சந்தித்தபோது 4-1 என்ற கணக்கில் அரை இறுதியின் முதல் கட்டத்தில், சென்னை கோவாவை வீழ்த்தியது. சென்னையில் விளையாடுவதை தங்களுக்குச் சாதகமாக்க எண்ணி விளையாடுவார்கள் சென்னையின் எஃப்.சி.
மறுபுறம், தங்களின் சீசனின் முதல் போட்டியை ஈஸ்ட் பெங்கால் எஃப்.சியை வீழ்த்தி அசத்தினர் கோவாவின் எஃப்.சி என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெட் டூ ஹெட்
போட்டிகள்: 21, சி.எஃப்.சி: 8, எஃப்.சி.ஜி: 11, போட்டி சமநிலை: 2.