அன்பு, காதல் , தளராத நம்பிக்கை இந்த மூன்றும் இணையும் பாடலை எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்துள்ளார் மார்ஷல் ராபின்சன்.
வாழ்க்கையில் உறவுகளில் பிளவுகள் தோன்றும் நேரத்தில், நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையை அமைதியாகப் பேணும் தருணங்களை இந்த பாடல் பசுமையாக சித்தரிக்கிறது.
நெஞ்சை நெகிழச் செய்யும் இசை அமைப்பும், ஆழமான குரல்களும், தீவிரமான காதலின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகின்றன.
