அர்த்தமுள்ள ஆன்மிகம்
ஜெயா டிவியில் நாள்தோறும் காலை 6 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘அருள் நேரம்’ என்ற பக்தி நிகழ்ச்சியில் இடம்பெறும் ஒரு பகுதி ‘அர்த்தமுள்ள ஆன்மீகம்.’ இதில் அன்றாட நாம் செய்யும் பூஜைகள், சம்பிரதாயங்கள், வழிபாடுகள் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு எளிய நடையில் விளக்கமளிக்கப்படுகிறது.
அதே அருள் நேரம் நிகழ்ச்சியில் தினமும் இடம்பெறும் ஒரு பகுதி ‘ஆனந்த ஆரம்பம்.’ இதில் காலை வேளையில் நேர்மறை சிந்தனைகளை வளர்க்க கூடிய அற்புதமான கருத்துக்கள் இடம்பெறுகின்றன. இப்பகுதியை பிரபல பேச்சாளர் மணிகண்டன் வழங்குகிறார்.அதையடுத்து இடம்பெறும் ஒரு பகுதி ‘குருவே சரணம்.’ மனிதர்களோடு மனிதர்களாய் வாழ்ந்து மனிதகுலத்தின் மேன்மைக்காக தொண்டாற்றிய பல்வேறு சித்தர்களின் வரலாற்றை இப்பகுதி பதிவு செய்கிறது.
இதனை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் சுவாமிநாதன் தொகுத்து வழங்குகிறார்.