‘9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே’ படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு பேசியபோது, ” சிறுமுதலீட்டு படங்கள் வெற்றி பெற வேண்டும். அப்போதுதான் சினிமா ஆரோக்கியமாக இருக்கும். இந்தப் படத்தின் முதல் காட்சிக்கு வருபவர்களுக்கு டிக்கட் இலவசமாக வழங்கப்படும் என இயக்குநர் கெளரி சங்கர் அறிவித்துள்ளார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள்” என்றார்.
இயக்குனர் கெளரி சங்கர் பேசியபோது, “இந்த படத்தின் கதையை மூன்றுவிதமான கோணத்தில் சொல்லியிருக்கிறேன். புரிந்த காதல், புரியாத காதல், புதிரான காதல் என்பதுதான் அது. படத்தை தியேட்டரில் முதல் காட்சியில் மட்டும் இலவசமாக பார்க்க ஏற்பாடு செய்துள்ளேன். இசையமைப்பாளர் ஆதிஷ் உத்தியன் அவர்களுக்கு இன்னிசை வேந்தன் என்ற பட்டத்தை அந்த விழாவில் வழங்குகிறேன்” என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இணை செயலாளர் எஸ். சௌந்தரபாண்டியன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் என். விஜயமுரளி, இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன், ஒளிப்பதிவாளர் மகிபாலன், வியாபார தொடர்பாளர் சண்முகம், கதாநாயகிகள் அபிநயா, ஸ்ரீபவி , ஐஸ்வர்யா ஆகியோர் பாடல் வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.