அற்புத பயணத்தின் ஆரம்பமாய் அமைந்த ‘காந்தா.’ தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்கப்போகும் பாக்யஸ்ரீ!

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 1950களின் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்ட ‘காந்தா’ திரைப்படத்தின் மூலம் தமிழில் பாக்யஸ்ரீ போர்ஸ் அறிமுகமாகிறார். நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஆழமான கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பது திரைத்துறை வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாத் துறையில் அவர் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்த கடின உழைப்பைக் கொடுத்திருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாவிட்டாலும், இந்த மொழியைக் கற்றுக்கொள்ள சிரத்தை எடுத்துக் கொண்டார் பாக்யஸ்ரீ. இதன் மூலம் தான் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு இன்னும் ஆழமாக உயிர் கொடுக்க முடியும் என நம்புகிறார். அவரது கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் இயல்பான திரை இருப்பு அவரை ஒவ்வொரு ஃப்ரேமிலும் தனித்து நிற்க வைக்கிறது.

பாக்யஸ்ரீக்கு தமிழ் சினிமாவில் காந்தா ஒரு அற்புத பயணத்தின் ஆரம்பம். இந்த படம் வெளியாகவிருக்கும் நிலையில் நிச்சயம் ரசிகர்கள் அவரைக் கொண்டாடுவார்கள் என்பதை உறுதியாக நம்பலாம்.

அற்புத பயணத்தின் ஆரம்பமாய் அமைந்த ‘காந்தா.’ தமிழ் சினிமாவில் புது அலையை உருவாக்கப்போகும் பாக்யஸ்ரீ!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here