‘கலைப்புலி’ தாணுவின் மனிதநேயம்… நுரையீரல் பாதிக்கப்பட்ட பெண்ணின் சிகிச்சைக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு. சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக  இடைநிலை நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக அவரது நுரையீரலில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
அதையடுத்து அவர் இரட்டை நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். தமிழ்நாடு மாற்று அறுவை சிகிச்சை ஆணையத்தில் (TRANSTAN) பதிவும் செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் கலைப்புலி எஸ்.தாணு, அவரது சிகிச்சைக்காக 5 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார்.  சென்னை காவேரி மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னுசாமி மற்றும் காவேரி மருத்துவமனையின் மனநல மருத்துவர் யாமினி கண்ணப்பன் ஆகியோர், நோயாளியின் குடும்பத்தினர் சார்பாக இந்த தொகையை பெற்றுக்கொண்டனர்.
காவேரி மருத்துவமனை இந்த மாற்று அறுவை சிகிச்சைக்கான மொத்த செலவை மானியமாக வழங்கியுள்ளதுடன், பல்வேறு நன்கொடையாளர்களிடமிருந்து நிதி திரட்டவும் திட்டமிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here