விஷால் நடிப்பில் மாபெரும் படைப்பாக உருவாகி வரும் ‘மகுடம்’ படத்தின் இரண்டாவது கட்ட படப்பிடிப்பு 17 நாட்கள் தொடர்ந்து நடந்தது. அதிரடியான கிளைமாக்ஸ் படப்பிடிப்பு மாலை 6 மணி முதல் காலை 6மணி வரை 12மணி நேரம் நடைபெற்று நிறைவடைந்தது.
சண்டைக் காட்சிகள் மிக பிரமாண்டமாக படமாக்கப்பட்ட இந்த இரண்டாவது கட்ட படப்பிடிப்பில், நடிகர், நடிகைகள், நூற்றுக்கணக்கான ஸ்டண்ட், நடன கலைஞர்கள், கணினி கிராபிக்ஸ் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நிறைந்த இப்படத்தின் காட்சி பிரமாண்டமாகவும், மிக நுணுக்கமாக வடிவமைக்கப்பட்ட இந்த கிளைமாக்ஸ், காட்சியமைப்பின் வலிமையான, உணர்ச்சியின் ஆழம், அதிரடி காட்சிகளின் எழுச்சி ஆகியவற்றை இணைத்து, படம் முழுவதும் ஒரு தனித்துவமான அனுபவத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.
நடிகர் விஷால் இயக்குநராகும் முதல் முயற்சியான மகுடம், ஒரு சாதாரண படம் அல்லாமல், சினிமா படைப்பை நேசிக்கும் ஒருவரின் உன்னத பயணம். நடிப்பு, இயக்கம் இவைகளில் ஒரு புதிய அனுபவத்தை அவர் உருவாக்கியுள்ளார்.
பிரபல ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன், நடன இயக்குனர் அசார் ஆகியோர்கள் நிஜத்தன்மை நிரம்பிய, அதிரடி காட்சிகளை வடிவமைத்தும், படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளார்கள்.
படக்குழுவினர்கள் இந்த 17நாட்கள் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு குறித்து பேசியபோது “ஒவ்வொரு நாளும் கடின உழைப்பு, பொறுமை, ஆர்வம், தளராத உறுதி ஆகியவற்றின் கலவையாக இருந்தது, இப்படத்தின் மையக் கருத்தான வீரமும் உணர்ச்சியும் இந்த படப்பிடிப்பில் முழுமையாகப் பிரதிபலித்தது” என்கின்றனர்.
சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் 2026-ல் வெளியாகி மக்களின் மனதில் மிகப்பெரிய வெற்றி பெறும் என நம்பலாம்.

